Maalai Ennai Vaattuthu

மாலை என்னை வாட்டுது மணநாளை மனம் தேடுது
மாலை என்னை வாட்டுது மணநாளை மனம் தேடுது

நாட்கள் நகராதோ பொழுதும் போகாதோ
நாட்கள் நகராதோ பொழுதும் போகாதோ

மாலை என்னை வாட்டுது
மணநாளை மனம் தேடுது

விழி வாசல் தேடி நீ கோலம் போட
வாழ்வெல்லாம் கூடி நாம் ராகம் பாட
விழி வாசல் தேடி நீ கோலம் போட
வாழ்வெல்லாம் கூடி நாம் ராகம் பாட
மயில் உன்னை தழுவ விரும்புகிறேன்
துயில் தனை இழந்து புலம்புகிறேன்...

இளமையும் தூங்காதா இல்லை இதயமும் தூங்காதா
தாகமும் தனியாதா எந்தன் மோகமும் தீராதா ஆ

மாலை என்னை வாட்டுது
மணநாளை மனம் தேடுது...

உன் கோவில் சேர பூத்திட்ட பூ நான் உன் நெஞ்சில் ஆட பூஜையும் என்நாள்
உன் கோவில் சேர பூத்திட்ட பூ நான் உன் நெஞ்சில் ஆட பூஜையும் என்நாள்
நினைவினில் ஆடும் என் கண்ணின் ஓரம் நீ வந்து நின்றால் அது சுகம் ஆகும்
தலைவனை அணைத்திடவா மடியை தலையணை ஆக்கிடவா
இரு கரம் சேர்த்திடவா இல்லை எனையே ஈர்த்திடவா

மாலை நமை வாட்டுது மணநாளை இமை தேடுது
மாலை நமை வாட்டுது மணநாளை இமை தேடுது

நாட்கள் நகராதோ பொழுதும் போகாதோ
நாட்கள் நகராதோ... பொழுதும் போகாதோ

மாலை நமை வாட்டுது
மணநாளை இமை தேடுது



Credits
Writer(s): Rajendran T
Lyrics powered by www.musixmatch.com

Link