Sithathinaal

சித்தத்தினால்
கொண்ட பித்தத்தினால்
காதல் யுத்தத்தினால்
எனது ரத்தத்தினால்

கவிதை எழுதிவைத்தேன் தோழி
இரு கண்ணிருந்தால் வாசித்து போடி

கண் பார்த்ததும்
கெண்டை கால் பார்த்ததும்
உன்னை பெண் பார்த்ததும்
தள்ளி பின் பார்த்ததும்

சுட்டாலும் மறக்காது நெஞ்சம்
முற்றும் சொன்னதில்லை தமிழுக்கு பஞ்சம்

கண்டிப்பதால்
என்னை நிந்திப்பதால்
நெஞ்சை தண்டிப்பதால்
தலையை துண்டிப்பதால்

தீராது என் காதல் என்பேன்
நீ தீயள்ளி தின்னச்சொல் தின்பேன்

உண்டென்று சொல் இல்லை
நில்லென்று கொல் என்னை
வாவென்று சொல் இல்லை
போவென்று கொல்

இம்மென்றால் உள்ளதடி சொர்க்கம்
நீயில்லை என்றால் இடுகாடு பக்கம்



Credits
Writer(s): A R Rahman, Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link