Kadhal Kan Kattudhe

காதல் கண் கட்டுதே
கவிதை பேசி கை தட்டுதே

ஆசை முள் குத்துதே
அருகில் போனால் தேன் சொட்டுதே

பறவையாய் திரிந்தவள்
இறகு போல் தரையிலே விழுகிறேன்

இரவிலும் பகலிலும்
தொடரும் உன் நினைவிலே கரைகிறேன்

காற்று நீ யாக வீச என் தேகம் கூச
எதை நான் பேச

கலைந்து போனானே கனவுகள் உரச
பறித்து போனாயே இவளது மனச

இருள் போலே இருந்தேனே
விளக்காக உணர்ந்தேனே உன்னை நானே

பார்வை கொஞ்சம் பேசுது
பருவம் கொஞ்சம் பேசுது
பதிலாய் எதை பேசிட தெரியாமல் நான்

கூச்சம் கொஞ்சம் கேக்குது
ஏக்கம் கொஞ்சம் கேக்குது
உயிரோ உனை கேட்டிடா தருவேனே நான்

அன்பே அன்பே மழையும் நீ தானே
கண்ணே கண்ணே வெயிலும் நீ தானே

ஒரு வார்த்தை உன்னை காட்ட
மறு வார்த்தை என்ன மீட்டா
விழுந்தேனே

கலைந்து போனேனே
பறித்து போனாயே

காதல் கண் கட்டுதே
கவிதை பேசி கை தட்டுதே

ஆசை முள் குத்துதே
அருகில் போனால் தேன் சொட்டுதே

பறவையாய் திரிந்தவன்
இறகு போல் தரையிலே விழுகிறேன்

இரவிலும் பகலிலும்
தொடரும் உன் நினைவிலே கரைகிறேன்

காற்று நீயாக வீச என் தேகம் கூச
எதை நான் பேச

கலைந்து போனாயே கனவுகள் உரச
பறித்து போனாயே இவளது மனசா

இருள் போலே இருந்தேனே
விளக்காக உணர்ந்தேனே உன்னை நானே



Credits
Writer(s): Anirudh Ravichander, Yugabharathi
Lyrics powered by www.musixmatch.com

Link