Unnakaagathane Inthauriyrullathu

உனக்காகத்தானே இந்த உயிர் உள்ளது
உன் துயரம் சாய என் தோள் உள்ளது
முடியாமல் நீளும் நாளென்றும் இல்லை
யார் என்ன சொன்னால் என்ன அன்பே
உன்னோடு நானும் தருவேன்

ஒரு முறை ஒரு முறை நீ சிரித்தால்
நான் வாழ்வது அர்த்தமாகும்
மறு முறை மறு முறை நீ சிரித்தால்
என் ஜென்மத்தின் சாபம் தீரும்

உனக்காகத்தானே இந்த உயிர் உள்ளது
உன் துயரம் சாய என் தோள் உள்ளது
முடியாமல் நீளும் நாளென்றும் இல்லை
யார் என்ன சொன்னால் என்ன அன்பே
உன்னோடு நானும் வருவேன்
யார் என்ன சொன்னால் என்ன அன்பே
உன்னோடு நானும் வருவேன்

ஒரு முறை ஒரு முறை நீ சிரித்தால்
நான் வாழ்வது அர்த்தமாகும்
மறு முறை மறு முறை நீ சிரித்தால்
என் ஜென்மத்தின் சாபம் தீரும்

வான் பார்த்த பூமி காய்ந்தாலுமே வரபென்றும் அழியாதடி
தான் பார்த்த பிம்பங்கள் தொலைந்தாலுமே கண்ணாடி மறக்காதடி

மழை வாசம் வருகின்ற நேரமெல்லாம்
உன் வியர்வை தரும் வாசம் வருமல்லவா
உன் நினைவில் நான் உறங்கும் நேரம் அன்பே
மரணங்கள் வந்தாலும் வரம் அல்லவா

ஒரு முறை ஒரு முறை நீ சிரித்தால்
நான் வாழ்வது அர்த்தமாகும்
மறு முறை மறு முறை நீ சிரித்தால்
என் ஜென்மத்தின் சாபம் தீரும்

உனக்காகத்தானே இந்த உயிர் உள்ளது
உன் துயரம் சாய என் தோள் உள்ளது
முடியாமல் நீளும் நாளென்றும் இல்லை
யார் என்ன சொன்னால் என்ன அன்பே
உன்னோடு நானும் தருவேன்
யார் என்ன சொன்னால் என்ன அன்பே
உன்னோடு நானும் தருவேன்

நாம் இருக்கும் இந்த நொடி முடிந்தாலுமே நினைவென்றும் முடியாதடி
நாம் எடுத்த நிழற்படம் அழிந்தாலுமே நிஜமென்றும் அழியாதடி

நான் கேட்கும் அழகான சங்கீதங்கள் நீ எந்தன் பெயர் சொல்லும் பொழுதல்லவா
என் மூச்சின் சுவாசங்கள் உனதல்லவா நீ இன்றி என் வாழ்க்கை பழுதல்லவா

ஒரு முறை ஒரு முறை நீ சிரித்தால்
நான் வாழ்வது அர்த்தமாகும்
மறு முறை மறு முறை நீ சிரித்தால்
என் ஜென்மத்தின் சாபம் தீரும்

உனக்காகத்தானே இந்த உயிர் உள்ளது
உன் துயரம் சாய என் தோள் உள்ளது
முடியாமல் நீளும் நாளென்றும் இல்லை
யார் என்ன சொன்னால் என்ன அன்பே
உன்னோடு நானும் தருவேன்
யார் என்ன சொன்னால் என்ன அன்பே
உன்னோடு நானும் வருவேன்



Credits
Writer(s): Yuvan Shankar Raja, Na.muthukumar
Lyrics powered by www.musixmatch.com

Link