Uzhaippaliyum Naane

உழைப்பாளியும் நானே முதலாளியும் நானே
தமிழ் அழகனும் நானே தமிழ் அரசனும் நானே
நான் போடாத வேஷமில்லை பாடாத பாடல் இல்லை
ஆனாலும் மானே என் அன்பு மனம் மாறவில்லை

ஒரு கோல கிளி ஜோடி தன்னை கூடுது கூடுது மானே

ஒரு கோல கிளி ஜோடி தன்னை கூடுது கூடுது மானே
அது திக்கும் கண்டு தெசையும் கண்டு வந்தது வந்தது தானே

ஒரு சோல குயில் ஜோடி தன்ன கூடுது கூடுது வந்து
அது நெஞ்சம் தொட்டு நெனைப்பும் தொட்டு பாடுது பாடுது சிந்து
கிட்ட வருமோ ஒட்ட வருமோ கொள்ளை அழகை கொட்டி தருமோ

ஒரு சோல குயில் ஜோடி தன்ன கூடுது கூடுது வந்து
அது நெஞ்சம் தொட்டு நெனைப்பும் தொட்டு பாடுது பாடுது சிந்து

இவன் ரெட்டை வேஷம் கட்டி வந்த ஆள் தானடி
ஒரு மன்னவனும் சின்னவனும் நான் தானடி
அன்பு தொல்லை தந்த பிள்ளை செய்த வித்தை ஆயிரம்
அதை ஒத்துகொண்டால் ஒட்டி கொண்டால் வண்ண பூச்சரம்

புன்னகை சிந்துகின்ற பொன்மகள் முத்து முகம்
எப்பவும் என் வசத்தில் வந்திடும் சொத்து சுகம்
இப்ப வரவோ எப்ப வரவோ பள்ளியறையில் அள்ளி தரவோ

ஒரு கோல கிளி ஜோடி தன்னை கூடுது கூடுது மானே
அது திக்கும் கண்டு தெசையும் கண்டு வந்தது வந்தது தானே

அந்தி வெயில் வந்து மையல் தந்து நான் வாடினேன்
படும் துன்பமெல்லாம் தென்றலிடம் நான் கூறினேன்
அந்த தென்றல் பெண்ணும் சொன்னாலம்மா உந்தன் சேதியே
அவள் சொன்ன பின்பு மின்னல் போல வந்தேன் தேடியே

என்ன நீ தொட்டவுடன் என்னவோ பண்ணுதையா
முற்றுகை இட்டவுடன் சிற்றிடை பிண்ணுதையா
வெட்கமிடுமோ அச்சமிடமோ தக்கதுணை தான் பக்கம் வருமோ

ஒரு சோல குயில் ஜோடி தன்ன கூடுது கூடுது வந்து
அது நெஞ்சம் தொட்டு நெனைப்பும் தொட்டு பாடுது பாடுது சிந்து
கிட்ட வருமோ ஓட்ட வருமோ கொள்ளை அழகை கொட்டி தருமோ

ஒரு கோல கிளி ஜோடி தன்னை கூடுது கூடுது மானே
அது திக்கும் கண்டு தெசையும் கண்டு வந்தது வந்தது தானே



Credits
Writer(s): Ilaiyaraaja, Vaali
Lyrics powered by www.musixmatch.com

Link