Manamengum Maaya Oonjal

மனமெங்கும் மாய ஊஞ்சல்(மனமெங்கும் மாய ஊஞ்சல்)
உனதன்பில் ஆட ஆட(உனதன்பில் ஆட ஆட)

மழை பொங்கும் தூய மேகம்(மழை பொங்கும் தூய மேகம்)
உயிர் உள்ளே சாரல் போட(உயிர் உள்ளே சாரல் போட)

கோடையும், வாடையும்
பாத்திடா தாவரம்
வரம் நீ தந்தாய்
வான் பூக்குதே

நான் உன் தோளில் கண் சாய
வெண்மீன்கள் பொன் தூவ

காற்றிலே சிறகை நாம் விரித்தால்
துளி ஆகாதோ பூமி
வெளியெலாம் காதலால் நிறைத்தால்
அதற்கீடேது சாமி

எங்கும் மாய ஊஞ்சல்
உனதன்பில் ஆட ஆட
மழை பொங்கும் தூய மேகம்
உயிர் உள்ளே சாரல் போட

முத்தம் வைக்கும் வேனீர் காலங்கள்
கட்டி கொள்ளும் ஈர கோலங்கள்

உன் கால் தடம் நானே
என் தாய் நிலம் கண்டேனே
தடாகம் தேகம் வாழும்
காணும் மீன்கள் நீ

நான் மண் சேர்ந்து நீர் போல
உன் சாயல் கொண்டேனே

காற்றிலே சிறகை நாம் விரித்தால்
துளி ஆகாதோ பூமி
வெளியெலாம் காதலால் நிறைத்தால்
அதற்கீடேது சாமி

எங்கும் மாய ஊஞ்சல்
உனதன்பில் ஆட ஆட
மழை பொங்கும் தூய மேகம்
உயிர் உள்ளே சாரல் போட

மரம் ஒரு இசை
மொட்டரும்பு ஒரு இசை
கடல் ஒரு இசை
நம் உடல் ஒரு இசை

நிலவொளி வீசும் காற்றில் பேசும்
பறவையின் தாய்மை யாழிசை

வெண் சிறகை வீசும் மூச்சு காற்றிலே
கண் உருக பாடும் கோடி மூங்கிலே

உன் மொழிகளோடு தேன் வழிகிறதே
என் மார்பிலே
நீ பேசும் வாசம்
நீ அல்லவா

காற்றிலே சிறகை நாம் விரித்தால்
துளி ஆகாதோ பூமி
வெளியெலாம் காதலால் நிறைத்தால்
அதற்கீடேது சாமி

எங்கும் மாய ஊஞ்சல்
உனதன்பில் ஆட ஆட
மழை பொங்கும் தூய மேகம்
உயிர் உள்ளே சாரல் போட



Credits
Writer(s): Yugabharathi, Santhosh Narayanan
Lyrics powered by www.musixmatch.com

Link