Thalattum Kaatre

தாலாட்டும் காற்றே வா
தலை கோதும் விரலே வா
தொலை தூர நிலவே வா
தொட வேண்டும் வானே வா

உன் சின்ன இதழ் முத்தம் தின்னாமல்
என் ஜென்மம் வீணென்று போவேனோ
உன் வண்ண திருமேனி சேராமல்
என் வயது பாழ் என்று ஆவேனோ
உன் அழகு ராஜாங்கம் ஆளாமல்
என் ஆவி சிறிதாகி போவேனோ

என்னுயிரே நீ தானோ
என்னுயிரே நீ தானோ

தாலாட்டும் காற்றே வா
தலை கோதும் விரலே வா
தொலை தூர நிலவே வா
தொட வேண்டும் வானே வா

கண்ணுக்குள் கண் வைத்து
கண் இமையால் கண் தடவி
சின்னதொரு சிங்காரம்
செய்யாமல் போவேனோ

பேச்சிழந்த வேளையிலே
பெண் அழகு என் மார்பில்
மூச்சு விடும் ரசனையை
முகராமல் போவேனோ

உன் கட்டு கூந்தல் காட்டில்
நுழையாமல் போவேனோ
அதில் கள்ள தேனை கொஞ்சம்
பருகாமல் போவேனோ

நீ பாதி தூக்கத்தில் புலம்புவதை
ஒலிப்பதிவு நான் செய்ய மாட்டேனோ
நீ பாதி தூக்கத்தில் புலம்புவதை
ஒலிப்பதிவு நான் செய்ய மாட்டேனோ
நீ ஊடல் கொண்டாடும் பொழுதுகளில்
அதை உனக்கு ஒளி பரப்ப மாட்டேனோ

என்னுயிரே நீ தானோ
என்னுயிரே நீ தானோ

தாலாட்டும் காற்றே வா
தலை கோதும் விரலே வா

ஒரு நாள் ஒரு பொழுது
உன் மடியில் நான் இருந்து
திருநாள் காணாமல்
செத்தொளிந்து போவேனோ

தலையெல்லாம் பூக்கள் பூத்து
தள்ளாடும் மரமேறி
இலையெல்லாம் உன் பேரை எழுதாமல் போவேனோ

உன் பாதம் வாங்கி நெஞ்சில்
பதியாமல் போவேனோ
உன் கண்ணீர் எச்சில் ருசியை
அறியாமல் போவேனோ

உன் உடலை உயிர் விட்டு போனாலும்
என் உயிரை உன்னோடு பாய்ச்சேனோ
உன் உடலை உயிர் விட்டு போனாலும்
என் உயிரை உன்னோடு பாய்ச்சேனோ
உன் அங்கம் எங்கெங்கும் உயிராகி
நீ வாழும் வரை நானும் வாழ்வேனோ

என் உரிமை நீ தானோ
என் உரிமை நீ தானோ

தாலாட்டும் காற்றே வா
தலை கோதும் விரலே வா
தொலை தூர நிலவே வா
தொட வேண்டும் வானே வா

உன் சின்ன இதழ் முத்தம் தின்னாமல்
என் ஜென்மம் வீணென்று போவேனோ
உன் வண்ண திருமேனி சேராமல்
என் வயது பாழ் என்று ஆவேனோ
உன் அழகு ராஜாங்கம் ஆளாமல்
என் ஆவி சிறிதாகி போவேனோ

என்னுயிரே நீ தானோ
என்னுயிரே நீ தானோ, நீ தானோ...



Credits
Writer(s): Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link