Vasamaakku

சாயம் போன மாகம் - மை
தீர்ந்துபோன மாகம் - அது
தீயின் செம்மை சூடும் ராத்திரி!

காற்றைப் போல ஓடோடி
கால் களைத்த நாடோடி
காதல் கொண்டு ஆடும் ராத்திரி!

இமையே இல்லாமல்
கோடி கண்ணில் காணும் ராத்திரி
இசையே இல்லாமல்
வாயில்லாமல் பாடும் ராத்திரி

என் நெஞ்சின் மீது
திராட்சை ஆற்றை ஊற்றும் ராத்திரி
பொய்யென்ற இன்றை
உண்மை என்று மாற்றும் ராத்திரி

அற றற
அற மேளம் அற ஓங்கி அற அங்கே
ஏ... அற றற
அற நேற்று அற உன்னை மற இங்கே

வான்
திறக்க திறக்க திறக்க
திறக்கப் போகுதே
வசமாக்கு வசமாக்கு வசமாக்கு
வானை வசமாக்கு!

கள்ளின் போதை
இங்கே பாவமா?
கள்ளைப் பருகாது
மரிப்பதுதான் பாவமா?

பாசக்காரன்
கோப்பையில் ஆடுவான்
மீசைக்காரன் நான்
ஏதேதோ பாடுவேன்

சுதியில் பேதமென
தாளம் தப்புதென
சொல்வோர் காதுகளை மூடுவேன்!

ஹே காலை மாலை
என்று நட்பில் இல்லை ஏதுமே
என் நண்பனோடு
நான் களிக்கும் வாழ்க்கை போதுமே

ஹே மூளை வேலை
ஏதும் இங்கு தேவையில்லையே
என் நண்பன் கைகள்
கோக்கும்போது வானம் எல்லையே

அற றற
அற மேளம் அற ஓங்கி அற அங்கே
ஏ... அற றற
அற நேற்று அற உன்னை மற இங்கே

வான்
திறக்க திறக்க திறக்க
திறக்கப் போகுதே
வசமாக்கு வசமாக்கு வசமாக்கு
வானை வசமாக்கு!



Credits
Writer(s): Atul Gogavale, Ajay Gogavale, Amitabh Bhattacharya
Lyrics powered by www.musixmatch.com

Link