Neenga Mudiyuma

நீங்க முடியுமா
நினைவு தூங்குமா

நீங்க முடியுமா
நினைவு தூங்குமா
காலம் மாறுமா
காயம் மாறுமா

வானம் பிரிந்த மேகமா
வாழ்வில் உனக்கு சோகமா
காதல் போயின் காதல் சாகுமா
காற்றாகவே நேற்றாகவே நீ போனதேன்

உயிர் போகும் நாள் வரை
உன்னை தேடுவேன்
உனை மீண்டும் பார்த்தப்பின்
கண் மூடுவேன்

நீங்க முடியுமா
நினைவு தூங்குமா

தேவன் ஈன்ற ஜீவனாக
உன்னை பார்க்கிறேன்
மீண்டும் உன்னை வேண்டுமென்று
தானம் கேட்கிறேன்

நீ கண்கள் தேடும் வழியோ
என் கருணை கொண்ட மழையோ
நீ மழலை பேசும் மொழியோ
என் மனதை நெய்த இழையோ

வீசும் தென்றல் என்னை விட்டு
விலகி போகுமோ
போன தென்றால் என்று எந்தன்
சுவாசம் ஆகுமோ
இரு விழியிலே ஒரு கனவென
உன்னை தொடருவேன்...

நீங்க முடியுமா
நினைவு தூங்குமா
காலம் மாறுமா
காயம் மாறுமா

மூன்று காலில் காதல் தேடி
நடந்து போகிறேன்
இரண்டு இரவு இருந்த போதும்
நிலவை கேட்கிறேன்

நீ கடந்து போன திசையோ
நான் கேட்க மறந்த இசையோ
நீ தெய்வம் தேடும் சிலையோ
உன்னை மீட்க என்ன விலையோ

இன்று இல்லை நீ எனக்கு
உடைந்து போகிறேன்
மீண்டு வாழ நாளை உண்டு
மீட்க வருகிறேன்

ஒரு தனிமையும்
ஒரு தனிமையும்
இனி இனையுமே

நீங்க முடியுமா
நினைவு தூங்குமா
காலம் மாறுமா
காயம் மாறுமா

வானம் பிரிந்த மேகமா
வாழ்வில் உனக்கு சோகமா
காதல் போயின் காதல் சாகுமா
காற்றாகவே நேற்றாகவே நீ போனதேன்

உயிர் போகும் நாள் வரை
உன்னை தேடுவேன்
உனை மீண்டும் பார்த்தப்பின்
கண் மூடுவேன்

நீங்க முடியுமா
நினைவு தூங்குமா



Credits
Writer(s): Kabilan, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link