Podhumada Saami

போதுமடா சாமி நான் வெச்ச பாசம்
வேகுதடா பூமி எல்லாம் வெளி வேஷம்
போதுமடா சாமி நான் வெச்ச பாசம்
வேகுதடா பூமி எல்லாம் வெளி வேஷம்

விதி வெச்ச தீயிலே மனம் கசங்கிப் போனதே
விழி ரெண்டும் நீருல உயிர்பொசுங்கிப் போனதே
கண்ணோரம் கண்ணீரென்றால் சோகம் இல்ல
கண்ணீரே கண்களென்றால் ஏது சொல்ல

போதுமடா சாமி நான் வெச்ச பாசம்
வேகுதடா பூமி எல்லாம் வெளி வேஷம்

மாமரத்தில் கூடுக்கட்டி பூங்குருவி வாழயிலே
வேரறுந்து போனதுன்னா வேதனதான் பூமியிலே
பாவப்பட்ட ஜீவன் ஆகிப்புட்டேன் நானே
ஏகப்பட்ட சோகம் தேடிக்கிட்டேன் வீணே
புலி வேஷம் போட்டதென்ன பூனைக்குட்டி
அதநானும் காத்ததென்ன வேலி கட்டி

போதுமடா சாமி நான் வெச்ச பாசம்
வேகுதடா பூமி எல்லாம் வெளி வேஷம்
ஆரிரோ ஆரிரோ ஆராரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ

ஓரமழை தூரயிலே வாங்கிவந்தேன் சோளப்பொரி
வீடுவந்து பார்க்குறப்போ காணலையே வாசப்படி
ஊதுபத்தி வாசம் வீசும் கொஞ்சநேரம்
வானவில்லின் ஜாலம் வாழும் கொஞ்சநேரம்
அடிமாடா ஆகிப்போனேன் யாருமில்ல
அடபோடா வாழ்ந்து ஒன்னும் ஆவதில்ல

போதுமடா சாமி நான் வெச்ச பாசம்
வேகுதடா பூமி எல்லாம் வெளி வேஷம்
விதி வெச்ச தீயிலே மனம் கசங்கிப் போனதே
விழி ரெண்டும் நீருல உயிர்பொசுங்கிப் போனதே
கண்ணோரம் கண்ணீரென்றால் சோகம் இல்ல
கண்ணீரே கண்களென்றால் ஏது சொல்ல

போதுமடா சாமி
வேகுதடா பூமி



Credits
Writer(s): Vidya Sagar, Vijay Pa
Lyrics powered by www.musixmatch.com

Link