Meenamma Athikalayilum

மீனம்மா
அதிகாலையிலும், அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே
அம்மம்மா
முதல் பாா்வையிலே சொன்ன வாா்த்தை எல்லாம் ஒரு காவியமே

சின்ன, சின்ன ஊடல்களும், சின்ன, சின்ன மோதல்களும்
மின்னல் போல வந்து, வந்து போகும்
மோதல் வந்து, ஊடல் வந்து முட்டி கொண்டபோதும்
இங்கு காதல் மட்டும் காயமின்றி வாழும்

இரு மாதங்கள் நாட்கள் செல்ல ஆ...
நிறம் மாறிடும் பூக்கள் அல்ல ஆ...

மீனம்மா
அதிகாலையிலும், அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே

ஒரு சின்ன பூத்திாியில், ஒளி சிந்தும் ராத்திாியில்
இந்த மெத்தை மேல் இளம் தத்தை போல் புது வித்தை காட்டிடவா
ஒரு ஜன்னல் அங்கிருக்கு தென்றல் எட்டி பார்ப்பதற்கு
அதை மூடாமல் தாழ் போடாமல் எனை தொட்டு தீண்டுவதா

மாமன்காரன் தானே மாலை போட்ட நானே
மோகம் தீரவே மெதுவாய், மெதுவாய் தொடலாம்

மீனம்மா
மழை உன்னை நனைத்தால் இங்கு எனக்கல்லவா குளிா் காய்ச்சல் வரும்
அம்மம்மா
வெயில் உன்னை அடித்தால் இங்கு எனக்கல்லவா உடல் வோ்த்து விடும்

அன்று காதல் பண்ணியது, உந்தன் கன்னம் கிள்ளியது
அடி இப்போதும் நிறம் மாறாமல் இந்த நெஞ்சில் நிற்கிறது
அங்கு பட்டு சேலைகளும், நகை நட்டும் பாத்திரமும்
உனை கேட்டேனே சண்டை போட்டேனே அது கண்ணில் நிற்கிறது

ஜாதிமல்லி பூவே, தங்க வெண்ணிலாவே
ஆசை தீரவே பேசலாம் முதல் நாள் இரவு

மீனம்மா
உன்னை நேசிக்கவும், அன்பை வாசிக்கவும் தென்றல் காத்திருக்கு
அம்மம்மா
உன்னை காதலித்து புத்தி பேதலித்து புஷ்பம் பூத்திருக்கு

உன்னை தொட்ட தென்றல் வந்து
என்னை தொட்டு என்னென்னவோ சங்கதிகள் சொல்லி விட்டு போக
உன் மனமும், என் மனமும்
ஒன்றையொன்று ஏற்றுகொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட

இன்று மோகனம் பாட்டெடுத்தோம்
முழு மூச்சுடன் காதலித்தோம்

மீனம்மா
அதிகாலையிலும், அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே



Credits
Writer(s): Deva, Vaali
Lyrics powered by www.musixmatch.com

Link