Alelankiliye - Duet (From "Naan Pesa Ninepadellam")

ஏலேலங்கிளியே என்னைத் தாலாட்டும் இசையே
உன்னைப் பாடாத நாள் இல்லையே
அடி கண்ணம்மா பாடாத நாள் இல்லையே

ஏலேலங்கிளியே என்னைத் தாலாட்டும் இசையே
உன்னைப் பாடாத நாள் இல்லையே
அடி கண்ணம்மா பாடாத நாள் இல்லையே

தெம்மாங்கு பாட்டு அத நான் பாடக் கேட்டு
என்னை பாராட்டும் காலம் வரும்
அடி கண்ணம்மா பாராட்டும் காலம் வரும்

ஏலேலங்கிளியே என்னைத் தாலாட்டும் இசையே
உன்னைப் பாடாத நாள் இல்லையே
அடி கண்ணம்மா பாடாத நாள் இல்லையே

சோகம் எல்லாம் போகும் ஒரு தேதி சொல்லட்டுமா?
நல்ல சேதி சொல்லட்டுமா?
அன்பில் இந்த மண்ணை வெல்லும் வித்தை சொல்லட்டுமா?
வெற்றி முத்தை அள்ளட்டுமா?

ஒத்தையடிப் பாதை இதில் தேறும் வரும் நாளை
ஒத்தையடிப் பாதை இதில் தேறும் வரும் நாளை
எல்லாம் நாளை மாறி விடும் நிலவும் கூட பூமி வரும்
எல்லாம் நாளை மாறி விடும் நிலவும் கூட பூமி வரும்

ஏலேலங்கிளியே என்னைத் தாலாட்டும் இசையே
உன்னைப் பாடாத நாள் இல்லையே
அடி கண்ணம்மா பாடாத நாள் இல்லையே

சோலைக் குயில் தேடி என்னை பார்க்க வந்துவிடும்
புது பாடல் கேட்டு வரும்
ஆடி வெள்ளம் ஓடி வந்து ராகம் சொல்லித் தரும்
எந்தன் தாகம் தீர்த்து விடும்
நானா பாடுற பாட்டு
அந்த தென்றலும் அதைக் கேட்டு
நானா பாடுற பாட்டு அந்த தென்றலும் அதைக் கேட்டு
வசந்தம் இன்று பூவில் வரும் நாளை எந்தன் வாசல் வரும்
வசந்தம் இன்று பூவில் வரும் நாளை எந்தன் வாசல் வரும்

ஏலேலங்கிளியே என்னைத் தாலாட்டும் இசையே
உன்னைப் பாடாத நாள் இல்லையே
அடி கண்ணம்மா பாடாத நாள் இல்லையே

தெம்மாங்கு பாட்டு அத நான் பாடக் கேட்டு
என்னை பாராட்டும் காலம் வரும்
அடி கண்ணம்மா பாராட்டும் காலம் வரும்

ஏலேலங்கிளியே என்னைத் தாலாட்டும் இசையே
உன்னைப் பாடாத நாள் இல்லையே
அடி கண்ணம்மா பாடாத நாள் இல்லையே



Credits
Writer(s): Pazhani Bharathi, Sirpi
Lyrics powered by www.musixmatch.com

Link