Alli Pookal

உன் கருவிழியில் விழுந்தேன்
மறுமுறை பிறந்தேன்
உன்னால் எனையே மறக்கிறேன்

எனது கனவில் தினம் தினம்
உனை நான் ரசித்தேன்
விழித்திட அன்பே மறுக்கிறேன்

உன் அருகினில் வாழ்வது சுகம் சுகம்
என் இருதயம் உருகுதே அனுதினம்
இந்த பெண்ணின் வெட்கம் அனைத்தையும்
நீ திருடி கொண்டாயோ

உலகின் அல்லி பூக்களின் அரசியோ
உன்னை தாங்கும் நிலம் நானோ
தினமும் என்னை ஆளும் அரசனோ
உன் மகுடம் நான்தானோ

மயங்குகிறேன் மயங்குகிறேனா
உன் அருகில் தயங்குகிறேனே
நான் பெண்ணானதேனோ
உன் கை சேரத்தானோ

உணருகிறேன் உணருகிறேனா
உன் அழகில் உலருகிறேனே நான்
ஆணானது ஏனோ
உன் உயிர் சேரத்தானோ

ஓ பெண் நிலவே மறையாதே
என் காதல் என்றும் மாறாதே
என் உறவே பிரியாதே
என் ஆருயிரே...

யார் இவளோ
அந்த பிரம்மன் கவிதை குரலோ
நீ ரசிகன்
என்னை படிக்க வந்ததென்ன உன் இதழோ

உன் கருவிழியில் விழுந்தேன்
மறுமுறை பிறந்தேன்
உன்னால் எனையே மறக்கிறேன்

எனது கனவில் தினம் தினம்
உனை நான் ரசித்தேன்
விழித்திட அன்பே மறுக்கிறேன்

உன் அருகினில் வாழ்வது சுகம் சுகம்
என் இருதயம் உருகுதே அனுதினம்
இந்த பெண்ணின் வெட்கம் அனைத்தையும்
நீ திருடி கொண்டாயோ...

உலகின் அல்லி பூக்களின் அரசியோ
உன்னை தாங்கும் நிலம் நானோ
தினமும் என்னை ஆளும் அரசனோ
உன் மகுடம் நான்தானோ



Credits
Writer(s): Stephen Zechariah, Suriavelan
Lyrics powered by www.musixmatch.com

Link