Neethane Enthan Pon Vasantham

நீ தானே எந்தன் பொன் வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்

நீ தானே எந்தன் பொன் வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்

ஆஹா... நீதானே எந்தன் பொன் வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்
என் வாசல் ஹே வரவேற்க்கும் அந்நேரம்
உன் சொர்க்கம் ஹே அறங்கேரும் கண்ணோரம்

நீ தானே எந்தன் பொன் வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்

பாதை முழுதும்
கோடி மலர்கள்
பாடி வருமே
தேவக் குயில்கள்
உன் ஆடை ஹே மிதக்கின்ற பாலாடை
உன் காலை ஹே குளிப்பாட்டும் நீரோடை

வெயில் நாளும் சுடுமென தேகம் கெடுமென
ஜன்னல் திரையிடும் மேகம்
இரு காதல் விழிகளில் வீசும் மொழிகளில்
பிறையும் பௌர்ணமி ஆகும்
சந்தோஷம் உன்னோடு கைவீசும் எந்நாளும்

நீ தானே எந்தன் பொன் வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்
என் வாசல் ஹே வரவேற்க்கும் அந்நேரம்
உன் சொர்க்கம் ஹே அறங்கேரும் கண்ணோரம்

ஈர இரவில்
நூறு கனவு
பேதை விழியில்
போதை நினைவு
பன்னீரில் ஹே இளந்தேகம் நீராடும்
பனிப்பூக்கள் ஹே உனைக்கண்டு தேனூரும்

நீ ஆடை அணிகலன் சூடும் அறைகளில்
ரோஜா மல்லிகை வாசம்
முக வேர்வைத் துளியது போகும் வரையினில்
தென்றல் கவரிகள் வீசும்
நெஞ்சோரம் தள்ளாடும் முத்தாரம் என்னாளும்

நீ தானே எந்தன் பொன் வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்
என் வாசல் ஹே வரவேற்க்கும் அந்நேரம்
உன் சொர்க்கம் ஹே அறங்கேரும் கண்ணோரம்



Credits
Writer(s): Ilaiyaraaja, Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link