Ennathaan Sugamo

என்னதான் சுகமோ நெஞ்சிலே
இதுதான் வளரும் அன்பிலே
ராகங்கள் நீ பாடி வா
பண்பாடும்
மோகங்கள் நீ காணவா எந்நாளும்
காதல் உறவே

என்னதான் சுகமோ நெஞ்சிலே
இதுதான் வளரும் அன்பிலே

பூவோடு வண்டு
புது மோகம் கொண்டு
சொல்கின்ற வண்ணங்கள்
நீ சொல்லத்தான்

நான் சொல்லும்போது
இரு கண்கள் மூடி
எழுதாத எண்ணங்கள்
நீ சொல்லத்தான்

இன்பம் வாழும்
உந்தன் நெஞ்சம்
தீபம் ஏற்றும்
காதல் ராணி
சிந்தாத முத்துக்களை
நான் சேர்க்கும் நேரம் இது
காதல் உறவே

என்னதான் சுகமோ நெஞ்சிலே
இதுதான் வளரும் அன்பிலே

தீராத மோகம்
நான் கொண்ட நேரம்
தேனாக நீ வந்து
சீராட்டதான்

காணாத வாழ்வு
நீ தந்த வேலை
பூமாலை நான் சூடி
பாராட்டத்தான்

நீ என் ராணி
நாந்தான் தேனீ
நீ என் ராஜா
நான் உன் ரோஜா
தெய்வீக பந்தத்திலே
நான் கண்ட சொர்க்கம் இது
காதல் உறவே

என்னதான் சுகமோ நெஞ்சிலே
இதுதான் வளரும் அன்பிலே
ராகங்கள் நீ பாடி வா
பண்பாடும்
மோகங்கள் நீ காணவா எந்நாளும்
காதல் உறவே

என்னதான் சுகமோ நெஞ்சிலே
இதுதான் வளரும் அன்பிலே



Credits
Writer(s): Ilaiyaraaja, Panchu Arunachalam
Lyrics powered by www.musixmatch.com

Link