Guruvayurappa

குருவாயூரப்பா குருவாயூரப்பா
குருவாயூரப்பா குருவாயூரப்பா
நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி
குருவாயூரப்பா குருவாயூரப்பா
வேண்டாத தெய்வமில்லை நீதானே பாக்கி
ராதை உனக்குச் சொன்ன வேதமென்ன
நான் போகும் பாதை எந்நாளும் உன் பாதை
ராதை உனக்குச் சொன்ன வேதமென்ன
நான் போகும் பாதை எந்நாளும் உன் பாதை
குருவாயூரப்பா குருவாயூரப்பா
நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி

தேனாற்றங்க் கரையில் தெய்வீக குரலில்
நான் தான் ஒரு பாட்டிசைத்தேன்
தினந்தோறும் இரவில் நடுஜாமம் வரையில்
நான் தானே அதை கேட்டிருந்தேன்
அரகேற்றம் தான் ஆகாமல் தான்
அலைபாயும் என் ஜீவன் தான்
வா வா என் தேவா
செம்பூவாய் என் தேகம்
சேராதோ உன் கைகளிலே

குருவாயூரப்போ குருவாயூரப்பா
நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி

ஏகாந்த நினைவும் எறிகின்ற நிலவும்
என் மேல் ஒரு போர் தொடுக்க
எனை வந்து தழுவு ஏன் இந்த பிரிவு
மானே வா உனை யார் தடுக்க
பரிமாறலாம் பசியாறலாம்
பூமாலை நீ சூடும் நாள்
மாது உன் மீது இப்போது என் மோகம்
பாயாதோ சொல் பூங்குயிலே

குருவாயூரப்பா குருவாயூரப்பா
நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி
குருவாயூரப்பா குருவாயூரப்பா
வேண்டாத தெய்வமில்லை நீதானே பாக்கி
ராதை உனக்குச் சொன்ன வேதமென்ன
நான் போகும் பாதை எந்நாளும் உன் பாதை
குருவாயூரப்பா குருவாயூரப்பா (ஹ-ஹ-ஹ)
நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி
நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி



Credits
Writer(s): Ilaiyaraaja, Vaalee
Lyrics powered by www.musixmatch.com

Link