Pethu Eduthavathaan

பெத்து எடுத்தவதான் என்னையும்
தத்து கொடுத்துபுட்டா
பெத்த கடனுக்குத்தான் என்னை வித்து
வட்டியக் கட்டிப்புட்டா

பெத்து எடுத்தவதான் என்னையும்
தத்து கொடுத்துபுட்டா
பெத்த கடனுக்குத்தான் என்னை வித்து
வட்டியக் கட்டிப்புட்டா

பிள்ளையின் மனசு பித்தாச்சு
இங்க பெத்தவ மனசு கல்லாச்சு
இன்னொரு மனசு என்னாச்சு
அது முறிஞ்சு போன வில்லாச்சு

பெத்து எடுத்தவதான் என்னையும்
தத்து கொடுத்துபுட்டா
தத்து கொடுத்துப்புட்டா

வயித்துல வளத்த புள்ள வந்து நிக்க வாசல் இல்ல
மடியில வளந்ததுக்கு இங்கிருக்க ஆசை இல்ல
மகனா பொறந்ததுக்கு தொட்டணைக்க தாயும் இல்ல
மகனா வளந்த புள்ள துள்ளுறது நியாயம் இல்ல

தொட்டிலில் நாம் கிடந்தா சோகம் வந்து சேர்வதில்ல
தோளிலே வாழும் வரை துன்பமின்னு ஒண்ணும் இல்ல
கட்டில பாத்த பின்னே காண்பதெல்லாம் எங்கு சொல்ல
கண்ணுல ஆறிருக்கு போவதுக்கு தோணி இல்ல

சட்டை கிழிஞ்சிருந்தா தச்சு முடிச்சிரலாம்
நெஞ்சு கிழிஞ்சிருச்சே எங்க முறையிடலாம்
காவிரி கங்கை ஆறுகள் போலே
கண்களும் இங்கே நீராட

பெத்து எடுத்தவதான் என்னையும்
தத்து கொடுத்துபுட்டா
பெத்த கடனுக்குத்தான் என்னை வித்து
வட்டியக் கட்டிப்புட்டா

தலையில் வகிடெடுத்த தங்கவிரல் பார்த்தேனே
தலையில எழுதி வைச்ச அந்த விரல் பார்த்தேனா
கிளிய வளத்தெடுத்தா கேள்வி அது கேக்காது
புலிய வளத்தெடுத்தா பாசமுன்னு பாக்காது

சொல்லத்தான் வார்த்தையின்றி தாய்மனசு நோகும் அங்கே
சொல்லவே வாயுமின்றி ஓர் மனசு வாடும் இங்கே
சொல்லிலே வேல் எடுத்து வீசுகின்ற சேயும் அங்கே
மௌனத்தை பேசவிட்டா மாறிவிடும் யாவும் இங்கே

ரெண்டு கிளி இருக்கு ஒண்ணு தனிச்சிருக்கு
பெத்த கிளி அதுக்கு எந்த துணை இருக்கு
ஊருல எங்கே நாட்டுல எங்கே
காட்டுங்க எங்க தாய் போல

பெத்து எடுத்தவதான் என்னையும்
தத்து கொடுத்துபுட்டா
பெத்த கடனுக்குத்தான் என்னை வித்து
வட்டியக் கட்டிப்புட்டா

பிள்ளையின் மனசு பித்தாச்சு
இங்க பெத்தவ மனசு கல்லாச்சு
இன்னொரு மனசு என்னாச்சு
அது முறிஞ்சு போன வில்லாச்சு

பெத்து எடுத்தவதான் என்னையும்
தத்து கொடுத்துபுட்டா
பெத்த கடனுக்குத்தான் என்னை வித்து
வட்டியக் கட்டிப்புட்டா



Credits
Writer(s): Ilaiyaraaja, Mu Metha
Lyrics powered by www.musixmatch.com

Link