Thulli Ezhunthathu

துள்ளி எழுந்தது பாட்டு
சின்னக் குயிலிசைக் கேட்டு
சந்த வரிகளைப் போட்டு
சொல்லி கொடுத்தது காற்று
உறவோடு தான் அதை பாடணும்
இரவோடு தான் அரங்கேறணும்

துள்ளி எழுந்தது பாட்டு
சின்னக் குயிலிசை கேட்டு
துள்ளி எழுந்தது பாட்டு
சின்னக் குயிலிசைக் கேட்டு
சந்த வரிகளைப் போட்டு
சொல்லி கொடுத்தது காற்று
உறவோடு தான் அதை பாடணும்
இரவோடு தான் அரங்கேறணும்

துள்ளி எழுந்தது பாட்டு
சின்னக் குயிலிசைக் கேட்டு

உயிரே ஒரு வானம்பாடி உனக்காகக் கூவுது
அழகே புது ஆசை வெள்ளம் அணைத் தாண்டி தாவுது
மலரே தினம் மாலை நேரம் மனம் தானே நோவுது
மாலை முதல்...
மாலை முதல் காலை வரை
சொன்னால் என்ன காதல் கதை
காமன் கணை எனை வதைக்குதே

துள்ளி எழுந்தது பாட்டு
சின்னக் குயிலிசை கேட்டு

அடியே ஒரு தூக்கம் போட்டு நெடுநாள் தான் ஆனது
கிளியே பசும்பாலும் தேனும் வெறுப்பாகி போனது
நிலவே பகல் நேரம் போலே நெருப்பாக காயுது
நான் தேடிடும்...
நான் தேடிடும் ராசாத்தியே நீ போவதா ஏமாத்தியே
வா, வா கண்ணே இதோ அழைக்கிறேன்

துள்ளி எழுந்தது பாட்டு
சின்னக் குயிலிசைக் கேட்டு
சந்த வரிகளைப் போட்டு
சொல்லிக் கொடுத்தது காற்று
உறவோடு தான் அதை பாடணும்
இரவோடு தான் அரங்கேறணும்

துள்ளி எழுந்தது பாட்டு
சின்னக் குயிலிசை கேட்டு



Credits
Writer(s): Ilaiyaraaja, Amaren Gangai
Lyrics powered by www.musixmatch.com

Link