Naan Oru Sindhu

நான் ஒரு சிந்து, காவடிச்சிந்து
நான் ஒரு சிந்து காவடிச்சிந்து
ராகம் புரியவில்ல
உள்ள சோகம் தெரியவில்ல

தந்தை இருந்தும் தாயும் இருந்தும்
சொந்தம் எதுவும் இல்ல
அதை சொல்ல தெரியவில்ல

நான் ஒரு சிந்து காவடிச்சிந்து
ராகம் புரியவில்ல
உள்ள சோகம் தெரியவில்ல

தந்தை இருந்தும் தாயும் இருந்தும்
சொந்தம் எதுவும் இல்ல
அதை சொல்ல தெரியவில்ல

நான் ஒரு சிந்து காவடிச்சிந்து
ராகம் புரியவில்ல
உள்ள சோகம் தெரியவில்ல

இல்லாத உறவுக்கு என்னென்ன பேரோ
நாடோடி பாட்டுக்கு தாய் தந்தை யாரோ
இல்லாத உறவுக்கு என்னென்ன பேரோ
நாடோடி பாட்டுக்கு தாய் தந்தை யாரோ
விதியோடு நான் ஆடும் விளையாட்ட பாரு
வெளையாத காட்டுக்கு வெத போட்டதாரு

பாட்டு படிச்சா சங்கதி உண்டு
என் பாட்டுக்குள்ளையும் சங்கதி உண்டு கண்டுபிடி

நான் ஒரு சிந்து காவடிச்சிந்து
ராகம் புரியவில்ல
உள்ள சோகம் தெரியவில்ல

பெண் கன்று பசு தேடி பார்க்கின்ற வேளை
அம்மான்னு சொல்லவும் அதிகாரம் இல்லை
பெண் கன்று பசு தேடி பார்க்கின்ற வேளை
அம்மான்னு சொல்லவும் அதிகாரம் இல்லை
என் விதி அப்போதே தெரிஞ்சிருந்தாலே
கர்ப்பத்தில் நானே கரைஞ்சிருப்பேனே

தலை எழுத்தென்ன என் முதல் எழுத்தென்ன
தலை எழுத்தென்ன முதல் எழுத்தென்ன சொல்லுங்களேன்

நான் ஒரு சிந்து காவடிச்சிந்து
ராகம் புரியவில்ல
உள்ள சோகம் தெரியவில்ல

தந்தை இருந்தும் தாயும் இருந்தும்
சொந்தம் எதுவும் இல்ல
அதை சொல்ல தெரியவில்ல

நான் ஒரு சிந்து காவடிச்சிந்து
ராகம் புரியவில்ல
உள்ள சோகம் தெரியவில்ல



Credits
Writer(s): Ilaiyaraaja, Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link