Yaarenna Sonnalum

யா
தந்தானே-தந்தானே தானே

பூமியில (ஓ...) தேவதைகள் (தேவதைகள்)
உங்கள் புன்னகையால் மனம் வீசிடுங்கள் (வீசிடுங்கள்)
வானத்திலே (வானத்திலே) லட்சம் மின்மினிகள்
ஒரு மழை என்றே வந்து பொழியுங்கள்

மழை சிந்தும் தேன் துளியில்
அட இல்லாத சுவை தான்
உன் பாசத்தில் கண்டேன்
என் வாழ்க்கைக்கொரு விடை தான்

உண்மைகள் எங்கே (உண்மைகள் எங்கே) பொய்களுக்குள்ளே (பொய்களுக்குள்ளே)
நன்மைகள் எங்கே (நன்மைகள் எங்கே) தீமைகளுள்ளே (தீமைகளுள்ளே...)

யார் என்ன சொன்னாலும் யார் என்ன செஞ்சாலும்
சொந்தமும் பந்தமும் கூட வரும்
நாம் வந்த பின்னாலும் நாம் சென்ற பின்னாலும்
சொந்தமும் பந்தமும் பேரு சொல்லும்

இந்த குடும்பம் ஒரு கோவில் அதில் நீதானே சாமி
இங்க நிலவுகள் பல கோடி ஆனால் நீதான் பூமி

சுற்றமும் முற்றமும் யாருமே இன்றி
வாழ்ந்திடும் வீட்டினில் தெய்வம் இல்லை
பாசங்கள் நேசங்கள் ஏதுமே இன்றி
வாழ்ந்திடும் வாழ்க்கையோ வாழ்க்கையில்லை

பிரிந்தே நாம் வாழ்கின்ற போதிலும் நினைவுகள் நம்மை சேர்த்திடுமே
அழகாய் பூ பூத்திடவேண்டியே வேர்கள் நீர் ஈர்த்திடுமே
இன்னோர் ஒரு ஜென்மம் அது கிடைத்தாலும் கூட
இது போல் ஒரு சொந்தம் கிடைத்திட நாம் வரம் கேட்டு

யார் என்ன சொன்னாலும் யார் என்ன செஞ்சாலும்
சொந்தமும் பந்தமும் கூட வரும்
நாம் வந்த பின்னாலும் நாம் சென்ற பின்னாலும்
சொந்தமும் பந்தமும் பேரு சொல்லும்

துன்பங்கள் துயரங்கள் யார் தந்த போதிலும்
இன்பங்கள் மட்டும் நாம் சேர்த்து வைப்போம்
தெய்வங்களாய் நீங்கள் வாழ்கின்ற வீட்டினில்
தேவர்களாய் நாங்கள் காத்து நிப்போம்

மண்ணில் சிறு பறவை வாழ மரம் தான் இடம் கொடுத்திடும்
மரம் தான் இடம் கொடுத்த போதும் மண் தான் உயிர் அழித்திடும்
இன்னோர் ஒரு உலகில் நான் வளர்ந்தாலும் கூட
இது போல் ஒரு சொந்தம் கிடைத்திட நான் வரம் கேட்பேன்

யார் என்ன சொன்னாலும் யார் என்ன செஞ்சாலும்
சொந்தமும் பந்தமும் கூட வரும்
நாம் வந்த பின்னாலும் நாம் சென்றபின்னாலும்
சொந்தமும் பந்தமும் பேரு சொல்லும்

இந்த குடும்பம் ஒரு கோவில் அதில் நீ தானே சாமி
இங்க நிலவுகள் பல கோடி ஆனால் நீ தான் பூமி



Credits
Writer(s): Hiphop Tamizha
Lyrics powered by www.musixmatch.com

Link