Vaa Vaa Vanji

வா வா வஞ்சி இளம் மானே

வா வா வஞ்சி இளம் மானே
வந்தால் என்னை தருவேனே
வா வா வஞ்சி இளம் மானே
வந்தால் என்னை தருவேனே
வாழ்நாளிலே நீங்காமலே நீ பாதி நான் பாதியாக
வந்தாள் வஞ்சி இளம் மானே
கொண்டாள் உன்னை இங்கு தானே

ஈரெட்டு வயதில் ஈரத்தாமரை வாய்விட்டு சிரிக்காதா
வாய்விட்டு சிரிக்கும் மாலை வேளையில்
தேன் சொட்டு தெறிக்காதா
தேகத்தில் உனக்கு தேன்கூடு இருக்கு
தாகத்தை தணித்திட வா
ஆனாலும் நீ காட்டும் வேகம் ஆத்தாடி ஆகாதம்மா
பொன்வண்டு கூத்தாடும் போது பூச்செண்டு நோகாதம்மா
போதும் போதும் போ

வா வா வஞ்சி இளம் மானே
வந்தால் என்னை தருவேனே
வாழ்நாளிலே நீங்காமலே நீ பாதி நான் பாதியாக
வந்தாள் வஞ்சி இளம் மானே
கொண்டாள் உன்னை இங்கு தானே

நான் உன்னை நினைத்தேன் நேத்து ராத்திரி
நூலாட்டம் இளைத்தேனே
நான் கூட தவித்தேன் வேறுமாதிரி
பாலாட்டம் கொதித்தேனே
ஆசைகள் எனக்கும் அங்கங்கே சுரக்கும்
ஆளைத்தான் அசத்துவதேன்

பொன்வண்டு கூத்தாடும் போது பூச்செண்டு நோகாதம்மா
கால் மீது கால் போட்டு ஆட கல்யாண நாள் இல்லையா
நேரம் காலம் ஏன்

வந்தாள் வஞ்சி இளம் மானே
கொண்டாள் உன்னை இங்கு தானே
வாழ்நாளிலே நீங்காமலே நீ பாதி நான் பாதியாக
வா வா வஞ்சி இளம் மானே
வந்தால் என்னை தருவேனே
வந்தாள் வஞ்சி இளம் மானே
கொண்டாள் உன்னை இங்கு தானே



Credits
Writer(s): Ilaiyaraaja, Vaali Vaali
Lyrics powered by www.musixmatch.com

Link