Yaar Vazhiyil (From "Sila Nerangalil Sila Manidhargal")

யார் வழியில் யார் மொழியில் யார் துணையில்
விடைகள் வந்து சேருமோ
யார் விதியில் யார் சதியில் யார் மதியில்
தடைகள் வந்து நேருமோ

தீர்வுகள் இன்றியே
பயணம் தான் நீளுமோ
தொடர்ந்திடும் துன்பத்தை
இதயம் தான் தாங்குமோ

எத்திசை எமக்கென
விடியல்தனை காட்டுமோ
எவ்வழி நம்பிக்கை
நம்மை வந்து சேருமோ

எதுவும் கடந்து போகும் என நினைத்தோம்
யாவும் பொய்தானோ
விதியே வென்று தீரும் என படித்தோம்
யாவும் மெய்தானோ
யாரிடம் முறையிட
யாருமில்லை விடையை சொல்லிட

யாரோ தொடர்ந்த வழக்கு
விடியல்தனை தருமா நமக்கு
பாவம் நமது இலக்கு
நடை தளர்ந்து முடமாய் கிடக்கு

முன்வினை என்பது பின்வினை தேடுமோ
ஒருவழி பாதையில் வாழ்க்கைதான் ஓடுமோ
காரணம் யாரென்று கடவுளை கேட்பதா
காலத்தை கேட்பதா யார் இங்கு பேசுவார்

ஆகாயம் போலத்தான் அடங்காத கேள்விகள்
விடைதேட தேடத்தான் விரிசல்கள் நூறு
பலநேரம் வாழ்க்கைக்கு பலியாகும் மானுடம்
பறிபோன யாவையும் கிடைக்காது மீண்டும்

நாளைகள் என்பது எதுவரையில் நீளுமோ
நம்பிக்கை கீற்றுகள் அதுவரையில் வாழுமோ
சிலந்தியின் கூடென சிந்தனைகள் யாவுமே
சிக்கல்களில் ஆடுதே சிதறித்தான் போகுதே

எழுதாத நாடகம் இயக்குவது யாரிங்கே
முடிவென்ன என்பதும் யார் சொல்வாரோ
தெரியாத பாதையில் புரியாத தேடல்கள்
எங்கெங்கோ போகுதே விடை இங்கு இல்லையே

எதுவும் கடந்து போகும் என நினைத்தோம்
யாவும் பொய்தானோ
விதியே வென்று தீரும் என படித்தோம்
யாவும் மெய்தானோ
யாரிடம் முறையிட
யாருமில்லை விடையை சொல்லிட

யாரோ தொடர்ந்த வழக்கு
விடியல்தனை தருமா நமக்கு
பாவம் நமது இலக்கு
நடை தளர்ந்து முடமாய் கிடக்கு

யார் வழியில் யார் மொழியில் யார் துணையில்
விடைகள் வந்து சேருமோ
யார் விதியில் யார் சதியில் யார் மதியில்
தடைகள் வந்து நேருமோ



Credits
Writer(s): Snekan, C. Rajamanickam
Lyrics powered by www.musixmatch.com

Link