Sonthamulla Vazhkkai

சொந்தம் உள்ள வாழ்க்கை
சொர்க்கத்துக்கு மேல
சொத்து சுகம் ஏதும் வேண்டாமய்யா
சொன்ன கதை இல்லை
கேட்ட கதை இல்லை
இந்த கதை போல வேறேதய்யா

ஆயிரம் யானை பலம்
அண்ணன் தம்பி சேர்ந்திருந்தா
பாசத்தையும் ரோசத்தையும்
பந்தி வைக்க முந்தும்

புன்னகைக்கும் கண்ணீருக்கும்
வேறுபாடு ஏதுமில்லை
ஆனந்தமே வீடு முழுக்க
துள்ளி விளையாடும்

ஒரு ஆலமர விழுதா
பல உறவு ஒண்ணா வாழும்
பாக்கும் நெஞ்சம் பாசத்துல
ஊஞ்சலாடுதே

ஒரு கண்ணு கலங்கினாலும்
பல கைகள் துடைக்க வருமே
இப்படி ஒரு கூட்டுக்குள்ள தான்
வாழ ஏங்குதே

சொந்தம் உள்ள வாழ்க்கை
சொர்க்கத்துக்கு மேல
சொத்து சுகம் ஏதும் வேண்டாமய்யா
சொன்ன கதை இல்லை
கேட்ட கதை இல்லை
இந்த கதை போல வேறேதய்யா

அன்னை மடி போல தான்
அண்ணன் உள்ளம் தாங்குதே
தம்பி முகம் பார்க்கையில்
தந்தை முகம் தோன்றுதே

சொந்தம் வாழும் வீட்டில் தானே
தெய்வம் வந்து காவல் காக்கும்
தேவதைகள் தேடி வந்து
இந்த வீட்டில் பிறந்திடுமே

ஆயிரம் யானை பலம்
அண்ணன் தம்பி சேர்ந்திருந்தா
பாசத்தையும் ரோசத்தையும்
பந்தி வைக்க முந்தும்

புன்னகைக்கும் கண்ணீருக்கும்
வேறுபாடு ஏதுமில்லை
ஆனந்தமே வீடு முழுக்க
துள்ளி விளையாடும்

ஒரு ஆலமர விழுதா
பல உறவு ஒண்ணா வாழும்
பாக்கும் நெஞ்சம் பாசத்துல
ஊஞ்சலாடுதே

ஒரு கண்ணு கலங்கினாலும்
பல கைகள் துடைக்க வருமே
இப்படி ஒரு கூட்டுக்குள்ள தான்
வாழ ஏங்குதே

சொந்தம் உள்ள வாழ்க்கை
சொர்க்கத்துக்கு மேல
சொத்து சுகம் ஏதும் வேண்டாமய்யா
சொன்ன கதை இல்லை
கேட்ட கதை இல்லை
இந்த கதை போல வேறேதய்யா...



Credits
Writer(s): Siddhu Kumar, Snehan
Lyrics powered by www.musixmatch.com

Link