Thoduvanandhaa (From "Shyam Singha Roy")

தொடுவானந்தான்
கொடை சாயுதே
ஒரு நேசந்தான்
கையக் கோத்திடுதே

ஓ-ஓ-ஒ தூரமா
ஓ-ஓ-ஒ போகலாம்
ஓ-ஓ-ஒ மேகமா
ஓ-ஓ-ஒ மாறலாம்

இனி மனம் போலே
டமக்கு டமக்கு
இனி மனம் போலே
டமக்கு டமக்கு
இந்த மண் மேலே
டமக்கு டமக்கு
இந்த மண் மேலே

நீ உரையாடு
விடிய விடிய
ஊர் கதை பேசு
நெறைய நெறைய
இந்த ராமுழுசும்
நிலவு எறியும்
அட உறங்காதே

ஓ சக்கரை கட்டியா மாறுதே நொடி
அக்கறை கொட்டுற மனச நீ பிடி
நெஞ்சுல மொளைக்குற ஆசை
காத்துல ஏறி ஊஞ்சலும் ஆடிடுதே

றெக்கைய கட்டுதே கட்டுதே நொடி
மின்னல வெட்டுதே வெட்டுதே விழி
மின்மினி வார்த்தைய பேசி
இரு உசிர் எங்கோ ஊர்வலம் போயிடுதே
அடக் காதலின் கண்ணுல ரெண்டுமே மாட்டிடுதே

புரியாத உறவாக
நீ உசிர்க் காட்டில் பூக்குற
நொடியேனும் விலகாத
ஓர் நினைப்பாக மாறுற
கரையேற தெரிஞ்சாலும்
நான் உனக்குள்ள மூழ்குறேன்

இந்தக் காலம் நீளுமா?
வழிகாட்டி போகுமா?
அட ஏங்குதே ஏங்குதே
பார்வையில் கேக்குதே
வாஞ்சையா பூங்குருவி

அடக் கூண்டை விட்டுத் தான்
ஒரு கூடு கட்டுதே
அது மெல்லமா மெல்லமா
ஆடுதே ஆடுதே
இன்னொரு பூமியக் காட்டிடுதே

அதில் உரையாடு
விடிய விடிய
ஊர் கதைப் பேசு
நெறைய நெறைய
இந்த ராமுழுசும்
நிலவு எறியும்
அட உறங்காதே

மருதாணி சிவப்பாக
நீ நிறங்கூட்டி போகுற
தவமேதும் கொடுக்காத
ஓர் வரம் போல சேருற
எனக்கே தான் தெரியாம
நான் உனக்குள்ள வாழுறேன்

இந்தக் கூத்து இனிக்குது
தன்னைத் தானே மறக்குது
இது என்னன்னு என்னன்னு
யாருக்கு தெரியுமோ
யார் செஞ்ச மந்திரமோ

ஓ நிஜமாக நிலைக்குமா?
கனவாகி கலையுமா?
அந்த ரெண்டுக்கும் மத்தியில்
சிக்குதே சொக்குதே
சத்தமில்லாம சொக்கிடுதே

இனி மனம் போலே
டமக்கு டமக்கு
இனி மனம் போலே
டமக்கு டமக்கு
இந்த மண் மேலே
டமக்கு டமக்கு
இந்த மண் மேலே

அட உரையாடு
விடிய விடிய
ஊர் கதை பேசு
நெறைய நெறைய
இந்த ராமுழுசும்
நிலவு எறியும்
அட உறங்காதே



Credits
Writer(s): Mickey J Meyer, Soundararajan K
Lyrics powered by www.musixmatch.com

Link