Yennadi Seidhaai (From "1945")

என்னடி செய்தாய் எனை?
என் விழி தேடும் உனை
உரைகிறேன் உடைகிறேன்
எதிலும் நீ தானே

முன் அந்தி நேர மழை
நெஞ்செல்லாம் வீசும் அலை
கரைகிறேன் கலைகிறேன்
எதுவும் நீ தானே

மறந்துப் போன ஞாபகம்
திரும்ப வருவதுப் போல்
கடந்துப் போனக் காலங்கள்
திரும்பி வருகிறதோ?

மேகம் மண்ணைச் சேரும் வரை
காற்றின் கைகளில் பொம்மையடி

என்னடி செய்தாய் எனை?
என் விழி தேடும் உனை
உரைகிறேன் உடைகிறேன்
எதிலும் நீ தானே

முன் அந்தி நேர மழை
நெஞ்செல்லாம் வீசும் அலை
கரைகிறேன் கலைகிறேன்
எதுவும் நீ தானே

என் வசத்தில்
நானுமில்லை
உன் வசத்தில்
நீயுமில்லை
உடல்கள் மாறும்
உணர்வு மாறாதே

ஆ-ஆ-அ-ஆ
சொல்வதெல்லாம்
உண்மை இல்லை
உண்மை எல்லாம்
சொல்ல இல்லை
உதட்டில் உதடு
உறங்கும் நேரம்
மொழிகள் தோன்றாதே

உனக்கென நான் பிறந்தவன்
புரிந்தது இந்த நிமிடமே
உயிரென உனை நினைத்தவள்
கிடைத்தது புது வெளிச்சமே

கடலும் தீரும்
கடவுள் தீரும்
காதல் தீராதே

என்னடி செய்தாய் எனை?
என் விழி தேடும் உனை
உரைகிறேன் உடைகிறேன்
எதிலும் நீ தானே

முன் அந்தி நேர மழை
நெஞ்செல்லாம் வீசும் அலை
கரைகிறேன் கலைகிறேன்
எதுவும் நீ தானே



Credits
Writer(s): Yuvan Shankar Raja, Mohana Raja
Lyrics powered by www.musixmatch.com

Link