Thitthikiradhe (From "Veerame Vaagai Soodum")

தித்திக்கிறதே கண்கள் எத்-எத்தனையோ பெண்கள்
அதில் உன்னை மட்டும் கண்டால் உயிர் போராடும்
உன்னை தொடரும் சொற்கள் பத்திக்கிறதே பற்கள்
இது தான் உன் தாக்கம் என்றால் மனம் என்னாகும்

ஒரு நாள் நான் கை பிடிப்பேன் என்று யோசித்த காலம் அதுவே
உன் மேல் நான் கொண்ட காதலுக்கே காலம் மாலைகள் சூட்டியதிங்கே

உன் விரல் கோர்த்து வந்திடும் தூரம்
நிலை அறியாமல் நான் நடப்பேன்
உன் முகம் பார்த்து என் விழி மூடி
பல யுகம் கூட நான் கடப்பேன்

காலையில் போர்வைக்குள் உந்தன் சின்ன முகம் கண்டு
நான் என்னையே கிள்ளி தினம் வியப்பேனே
என் பக்கத்தில் நீ இருக்க இவன் இவன் வாழ ஒரு
முத்தத்தால் நன்றி சொல்லி நானும் சிரிப்பேனே

மறைந்தே நான் கதை பேசும் மரத்தின் அருகில் நெடு குரல் கேட்கும்
அலை வாங்கி அலைக்காமல் இனிமே கரைகள் நம் தடம் ஏற்கும்
உன் ஒற்றை சித்திரம் மச்சம் இரவாகும் வெண்ணிலா
கரும்பாகி கொத்துற கண்ணில் வரும் கோப்பை மின்னலா

உன் விரல் கோர்த்து வந்திடும் தூரம்
நிலை அறியாமல் நான் நடப்பேன்
உன் முகம் பார்த்து என் விழி மூடி
பல யுகம் கூட நான் கடப்பேன்

தித்திக்கிறதே கண்கள் எத்-எத்தனையோ பெண்கள்
அதில் உன்னை மட்டும் கண்டால் உயிர் போராடும்
உன்னை தொடரும் சொற்கள் பத்திக்கிறதே பற்கள்
இது தான் உன் தாக்கம் என்றால் மனம் என்னாகும்



Credits
Writer(s): Yuvan Shankar Raja
Lyrics powered by www.musixmatch.com

Link