Parandhu Pogindren (From "Kuthiraivaal")

பறந்து போகின்றேன்
சிறகி்ல்லாமல்
கவிதை ஆகின்றேன்
மொழியில்லாமல்

கானலின் தாகமே
என் பாடலின் ராகமே
நீ வந்து சேராமல்
நான் எங்கு போவேனோ

வண்ணங்கள் இல்லாத
ஓர் வானவில் நானே
உன் எண்ணங்கள் நீரூற்ற
எங்கெங்கு பூத்தேனே

மடிசாய ஓடிவா
மாயவா
முடியாத வான்போல நான்
மாயவா

நிலவானதால் புனலாகிறேன்

நீ வந்து காய தினம் தோன்றியே
நிதம் தேய்கிறாய்
என் மேனி வாட

காற்றோடு தீ ஆட
ஓர் வேள்வி செய்தேனே
உன் பிம்பம் நான் சேர
உருவின்றி நின்றேனே

பறந்து போகின்றேன்
சிறகில்லாமல்
கவிதை ஆகின்றேன்
மொழியில்லாமல்

கானலின் தாகமே
என் பாடலின் ராகமே
நீ வந்து சேராமல்
நான் எங்கு போவேனோ

வண்ணங்கள் இல்லாத
ஓர் வானவில் நானே
உன் எண்ணங்கள் நீரூற்ற
எங்கெங்கு பூத்தேனே



Credits
Writer(s): Kalyani Nair, Pradeep Kumar, Prasath Ramar
Lyrics powered by www.musixmatch.com

Link