Manadhai En Moodinaai

மனதை ஏன் மூடினாய் நீ
திறந்து வை செல்வமே

உள்ளம் உறுதி கொண்டாலே உலகம் உன் கையிலே
வாழ்வு உனக்காகவே ஹோ
பூக்கும் காலம் இது
சோர்வு வேண்டாமடா ஹோ
சின்னப் பருவம் இது

சிறு மீன் நீந்திப் போக சொல்லித் தந்தார்களா
குயில்கள் பறந்து செல்ல பாடம் சொன்னார்களா

மனதை ஏன் மூடினாய் நீ
திறந்து வை செல்வமே
மனதை ஏன் மூடினாய் நீ
திறந்து வை செல்வமே

பாதைகள் போட்டுத் தானா மேகங்கள் வானில் போகும்

விதிகளைத் தான் வகுத்த பின்பா தேனாக தென்றல் வீசும்
மலரும் மலர் வனத்திலே ஒரு சில செடிகள் பூத்தாலும்
பூத்திடும் மலர்களே பூக்கும்

பூத்த மலர் போல நீ வா
மலர்ந்து மணம் வீச வா
அருவி போலக் குருவி போல மனது மாறட்டுமே

மனதை ஏன் மூடினாய் நீ
திறந்து வை செல்வமே
உள்ளம் உறுதி கொண்டாலே உலகம் உன் கையிலே

தூங்காதே தூங்கும் விழிகள் பார்க்காதே புதிய விடியல்

எண்ணம் போல் வாழ்வு இருக்கும்
எண்ணிப் பார் சக்தி பிறக்கும்
தாயின் மடி போலவே உனக்கொரு தந்தை தோள் உண்டு
வெற்றி வரும் உள்ளம் தளராதே

விழுகும் பூமாலையும் உன் தோளில் தன்னால் விழும்
வெற்றித் தோல்வி எல்லை அல்ல ஓடிக்கொண்டே இரு

மனதை ஏன் மூடினாய் நீ
திறந்து வை செல்வமே
உள்ளம் உறுதி கொண்டாலே உலகம் உன் கையிலே

வாழ்வு உனக்காகவே ஹோ
பூக்கும் காலம் இது
சோர்வு வேண்டாமடா ஹோ
சின்னப் பருவம் இது

சிறு மீன் நீந்திப் போக சொல்லித் தந்தார்களா
குயில்கள் பறந்து செல்ல பாடம் சொன்னார்களா

மனதை ஏன் மூடினாய் நீ
திறந்து வை செல்வமே
மனதை ஏன் மூடினாய் நீ
திறந்து வை செல்வமே



Credits
Writer(s): Ilaiyaraaja, Bharathi Palani
Lyrics powered by www.musixmatch.com

Link