Uthaya Geetham

உதய கீதம் பாடுவேன்
உயிர்களை நான் தொடுவேன்
உதய கீதம் பாடுவேன்
ஒலிகளில் பூத் தொடுப்பேன்

உலகமெல்லாம் மறந்து போகும்
மரணம் கூட இறந்து போகும்
குழந்தைக்காகவே

உதய கீதம் பாடுவேன்
உதய கீதம் பாடுவேன்

பிள்ளை நாளை பார்க்குமே
என்னை எங்கே என்று கேட்குமே
கண்கள் நீரை வார்க்குமே
அது சிந்தும் கண்ணீர் தீர்த்தமே

தோளில் மாலை மாலையில்
தூக்கு மேடை காலையில்
அழுகின்ற உள்ளங்களே
வாழ்க வாழ்கவே

உதய கீதம் பாடுவேன்
உயிர்களை நான் தொடுவேன்
உலகமெல்லாம் மறந்து போகும்
மரணம் கூட இறந்து போகும்
குழந்தைக்காகவே

உதய கீதம் பாடுவேன்
உதய கீதம் பாடுவேன்

கண்ணே தீரும் சோதனை
இரு கண்ணில் என்ன வேதனை
கண்டேன் எந்தன் ஜீவனை
என் சாவில் கூட சாதனை

நாளை நானும் போகிறேன்
உன்னில் நானே வாழ்கிறேன்
பூப்போன்ற உள்ளங்களே
வாழ்க வாழ்கவே

உதய கீதம் பாடுவேன்
உயிர்களை நான் தொடுவேன்
உலகமெல்லாம் மறந்து போகும்
மரணம் கூட இறந்து போகும்
குழந்தைக்காகவே

உதய கீதம் பாடுவேன்
உதய கீதம் பாடுவேன்



Credits
Writer(s): Ilaiyaraaja, Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link