Kodiyile Malliyapoo

கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே
எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே

பறிக்கச் சொல்லித் தூண்டுதே
பவழமல்லித் தோட்டம்
நெருங்க விடவில்லையே
நெஞ்சுக்குள்ளே கூச்சம்

கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே
கொடுக்கவா தடுக்கவா
தவிக்கிறேன் நானே

மனசு தடுமாறும்
அது நெனச்சா நிறம் மாறும்
மயக்கம் இருந்தாலும்
ஒரு தயக்கம் தடை போடும்

நித்தம் நித்தம் உன் நெனப்பு
நெஞ்சுக்குழி காயும்
மாடு ரெண்டு பாதை ரெண்டு
வண்டி எங்கே சேரும்

பொத்தி வெச்சா அன்பு இல்ல
சொல்லிப்புட்டா வம்பு இல்ல
சொல்லத்தானே தெம்பு இல்ல
இன்பதுன்பம் யாரால

பறக்கும் திசையேது
இந்தப் பறவை அறியாது
உறவோ தெரியாது
அது உனக்கும் புரியாது

பாறையிலே பூ முளைச்சு
பார்த்தவங்க யாரு
அன்பு கொன்ட நெஞ்சத்துக்கு
ஆயுசு நூறு

காலம் வரும் வேளையிலே
காத்திருப்பேன் பொன்மயிலே
தேதி வரும் உண்மையிலே
சேதி சொல்வேன் கண்ணாலே

கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே
எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே

பறிக்கச் சொல்லித் தூண்டுதே
பவழமல்லித் தோட்டம்
நெருங்க விடவில்லையே
நெஞ்சுக்குள்ளே கூச்சம்

கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே
எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே



Credits
Writer(s): Ramasamy Thevar Vairamuthu, Ilaiyaraaja Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link