Nee Pathi Naan Pathi

நீ பாதி நான் பாதி கண்ணே
அருகில் நீ இன்றி தூங்காது கண்ணே
நீ பாதி நான் பாதி கண்ணே
அருகில் நீ இன்றி தூங்காது கண்ணே

நீ இல்லையே
இனி நான் இல்லையே
உயிர் நீயே
நீ பாதி நான் பாதி கண்ணா
அருகில் நீ இன்றி தூங்காது கண்ணே

வானப்பறவை வாழ நினைத்தால்
வாசல் திறக்கும் வேடந்தாங்கல்
கானப்பறவை பாட நினைத்தால்
கையில் விழுந்த பருவப்பாடல்
மஞ்சள் மணக்கும்
என் நெற்றி வைத்த பொட்டுக்கொரு
அர்த்தம் இருக்கும் உன்னாலே
மெல்லச் சிரிக்கும் உன் முத்து நகை
ரத்தினத்தை அள்ளித் தெளிக்கும் முன்னாலே
மெய்யானது உயிர் மெய்யாகவே தடையேது

நீ பாதி நான் பாதி கண்ணே
அருகில் நீ இன்றி தூங்காது கண்ணே
நீ பாதி நான் பாதி கண்ணா
அருகில் நீ இன்றி தூங்காது கண்ணே

இடது விழியில் தூசி விழுந்தால்
வலது விழியும் கலங்கிவிடுமே
இருட்டில் கூட இருக்கும் நிழல் நான்
இறுதி வரைக்கும் தொடர்ந்து வருவேன்
சொர்க்கம் எதற்கு என் பொன்னுலகம்
பெண்ணுருவில் பக்கம் இருக்கு
கண்ணே வா
இந்த மனம் தான் என் மன்னவனும்
வந்துலவும் நந்தவனம் தான்
அன்பே வா
சுமையானது ஒரு சுகமானது சுமை நீதான்

நீ பாதி நான் பாதி கண்ணா
அருகில் நீ இன்றி தூங்காது கண்ணே
நீ இல்லையே
இனி நான் இல்லையே
உயிர் நீயே
நீ பாதி நான் பாதி கண்ணா
அருகில் நீ இன்றி தூங்காது கண்ணே



Credits
Writer(s): Ilaiyaraaja, Kavignar Vaali
Lyrics powered by www.musixmatch.com

Link