Oru Raagam

ஆ-ஆ-ஆ-ஆ-ஆ
ஆ-ஆ-ஆ-ஆ
ஆ-ஆ-ஆ-ஆ-ஆ-ஆ-ஆ
ம்-ம்-ம்-ம்-ம்
ம்-ம்-ம்-ம்-ம்

ஒரு ராகம் பாடலோடு
காதில் கேட்டதோ
மனதோடு ஊஞ்சலாடுதோ
தினம் உறங்காமல் வாடுதே
சுகம் உறவாட தேடுதே
ஓ நெஞ்சமே
ஓராயிரம் சுகம் இது
ஒரு ராகம் பாடலோடு
காதில் கேட்டதோ
மனதோடு ஊஞ்சலாடுதோ

மாலை நேரக் காற்றில்
மகிழ்ந்தாடும் தென்னங்கீற்றே
மாலை சூடி நாளும்
எனை ஆளும் தெய்வம் நீயே

காதல் தேவி எங்கே
தேடும் நெஞ்சம் அங்கே
தேரில் போகும் தேவதை
நேரில் வந்த நேரமே
என்னுள்ளம் இன்று வானில் போகுதே

ஒரு ராகம் பாடலோடு
காதில் கேட்டதோ
மனதோடு ஊஞ்சலாடுதோ

ஆ-ஆ-ஆ-ஆ
ஏதோ நூறு ஜென்மம்
ஒன்று சேர்ந்து வந்த சொந்தம்
வாழும் காலம் யாவும்
துணையாக வேண்டும் என்றும்
காலம் தந்த பந்தம்
காதல் என்னும் கீதம்
ஜீவனாக கேட்குதே
சேர்ந்து இன்பம் கூட்டுதே
வராத காலம் வந்து சேர்ந்ததே

ஒரு ராகம் பாடலோடு
காதில் கேட்டதோ
மனதோடு ஊஞ்சலாடுதோ
தினம் உறங்காமல் வாடுதே
சுகம் உறவாட தேடுதே
ஓ நெஞ்சமே
ஓராயிரம் சுகம் இது
ஒரு ராகம் பாடலோடு
காதில் கேட்டதோ
மனதோடு ஊஞ்சலாடுதோ



Credits
Writer(s): Ilaiyaraaja, Muthulingam
Lyrics powered by www.musixmatch.com

Link