Neo Ravanan (feat. Anthakudi Ilayaraja)

ஏ மக்கா, ஏ ராசா ஊரோட உறவோட நேசா
வா மக்கா மகராசா வரலாற நீ மாத்து mass'ah
ஏ மக்கா, ஏ ராசா ஊரோட உறவோட நேசா
வா மக்கா மகராசா வரலாற நீ மாத்து mass'ah

அடை கோழி பறவை தான்டா ஆகாயம் அறியாதுடா
பருந்தோட மோதும் போது துரும்பாகும் வானம் தான்டா
ஆராஞ்சு ஆராஞ்சு பாரேன்டா
ஏடாண்ட எழுத்தெல்லாம் நீதான்டா

இனமென்ன நிறமென்ன அவனென்ன இவனென்ன
அனைவரும் சமமென வழி செய்ய புறப்படு
உலகுக்கு உரியவன் வியர்வை வெதச்சவன்
இறைவனை விடவும் மேலயின்னு சொல்லிக்கொடு
இனமென்ன நிறமென்ன அவனென்ன இவனென்ன
அனைவரும் சமமென வழி செய்ய புறப்படு
உலகுக்கு உரியவன் வியர்வை வெதச்சவன்
இறைவனை விடவும் மேலயின்னு சொல்லிக்கொடு

மனம் என்றே வென்றேனே
மனம் என்றே வென்றேனே ஏ... ஏ...
மனம் என்றே வென்றேனே ஏ...

ஏ மையால வர்ணம் செஞ்சா வாழ்த்து சொல்லு
ஏ பொய்யால வர்ணம் செஞ்சா எத்தி தள்ளு
ஏ மையால வர்ணம் செஞ்சா வாழ்த்து சொல்லு
ஏ பொய்யால வர்ணம் செஞ்சா எத்தி தள்ளு

எல்லோரும் சமமாக இருந்தா தான் நேர்மை நீதி
இல்லாத சாதிக்கு பகை ஏன்டா முட்டா மூதி
ஏ சுமை சுமந்தவன் பரம்பரையே தலை விதியொரு புனை கதையே
இமை திறந்திடு எரிமலையே எழு எழுதிடு விடுதலையே

அரசாங்க மங்குனே அதிகார கங்கானே
எதிர் கேள்வி கேட்காட்டி எதிராவ உனக்கே நீ

பல நூறாண்டா உள்ள கோவமடா
தொட்டு பாரேன்டா நான் ராவணன் டா
பல நூறாண்டா உள்ள கோவமடா
தொட்டு பார்க்க சொல்லு நான் ராவணன் டா

ஹே தகுதியும் திறமையும் பொறப்புல இருக்குதா
பொடனியில அடிச்சு நீ கலங்கடிடா
அறிஞனா ஞானியா அரக்கனின் இனமென
உருட்டுன உருட்ட நீ புறக்கணிடா

ஏ துண்டான சம்புகர்கள் சொல்லாகு நீ
ஏ ரெண்டான கட்டை விரல் வில்லாகு நீ
மறுபடி சாத்திரம் அது இது என்பவன் தோல உரிச்சு பறைய அடிடா



Credits
Writer(s): Bala Ravanan, Thanikodi
Lyrics powered by www.musixmatch.com

Link