Naan Thedum

ஆஹா
ஆஹா
ஆஆஅஆஅ

நான் தேடும் தேவதையே
நான் சூடும் தாமரையே
நீங்காத என் உயிரே பொன்னம்மா
வாயார நான் அழைக்க
தீயாக நான் கொதிக்க
வாராமல் வாட்டுவது என்னம்மா

ஆத்தா நீ பாத்தாக்கா
என் பாவம் தீரும் அம்மா
அன்னாடம் உன் பாட்டை
என் ஜீவன் பாடும் அம்மா
கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா

அம்மன் இல்லாத ஆலயமோ
கேள்வி கேக்குது என் மனது
உன்னைக் காணாமல் அந்தரத்தில்
ஊஞ்சல் ஆடுது என் உயிரு

பட்ட பாடுகள் போதுமடி
பக்தன் மேனியும் வேகுதடி
குற்றங்கள் கண்டாலே
சுற்றங்கள் இங்கேது
கோபத்தை நீ விட்டு வாடியம்மா

துன்பங்கள் வந்தாலும்
தொல்லைகள் தந்தாலும்
அன்புக்கு ஏதிங்கு வேலியம்மா
கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா

நான் தேடும் தேவதையே
நான் சூடும் தாமரையே
நீங்காத என் உயிரே பொன்னம்மா

ஆத்தா நீ பாத்தாக்கா
என் பாவம் தீரும் அம்மா
கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா

நேற்று தெம்மாங்கு பாடியவன்
சோக ராகங்கள் பாடுகிறேன்
தேவன் பூம்பாறைக் காட்டினிலே
தேவ தேவியைத் தேடுகிறேன்

கண்ணில் நீ வந்து காட்சி கொடு
கண்ணின் நீர்த் துளி துடைத்து விடு
சொந்தங்கள் பந்தங்கள்
செத்தாலும் போகாது
அம்மம்மா நீ என்னை வாழ விடு

கண்ணுக்குக் கண்ணாக
காப்பாற்றும் தெய்வம்தான்
பெண் என்று இந்நேரம் பேரை எடு
கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா

நான் தேடும் தேவதையே
நான் சூடும் தாமரையே
நீங்காத என் உயிரே பொன்னம்மா
வாயார நான் அழைக்க
தீயாக நான் கொதிக்க
வாராமல் வாட்டுவது என்னம்மா

ஆத்தா நீ பாத்தாக்கா
என் பாவம் தீரும் அம்மா
அன்னாடம் உன் பாட்டை
என் ஜீவன் பாடும் அம்மா
கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா



Credits
Writer(s): Ilaiyaraaja, Kanmani Suppu
Lyrics powered by www.musixmatch.com

Link