Ninnukori Varanam

நின்னுக்கோரி வர்ணம் வர்ணம்
இசைத்திட என்னைத் தேடி வரணும் வரணும்

ஒரு கிளி தனித்திருக்க
உனக்கென தவம் இருக்க
இரு விழி சிவந்திருக்க
இதழ் மட்டும் வெளுத்திருக்க
அழகிய ரகுவரனே அனுதினமும்

நின்னுக்கோரி வர்ணம் வர்ணம்
இசைத்திட என்னைத் தேடி வரணும் வரணும்

உன்னைத் தான் சின்னப் பெண் ஏதோ கேட்க
உள்ளுக்குள் அங்கங்கே ஏக்கம் தாக்க
மொட்டுத் தான் மெல்லத் தான் பூப்போல் பூக்க
தொட்டுப்பார் கட்டிப்பார் தேகம் வேர்க்க

பூஜைக்காக வாடுது
தேவன் உன்னைத் தேடுது
ஆசை நெஞ்சு ஏங்குது
ஆட்டம் போட்டுத் தூங்குது
உன்னோடு நான் ஓயாமல்
தேனாற்றிலே நீராட நினைக்கையில்

நின்னுக்கோரி வர்ணம் வர்ணம்
இசைத்திட என்னைத் தேடி வரணும் வரணும்

ஒரு கிளி தனித்திருக்க
உனக்கென தவம் இருக்க
இரு விழி சிவந்திருக்க
இதழ் மட்டும் வெளுத்திருக்க
அழகிய ரகுவரனே அனுதினமும்

நின்னுக்கோரி வர்ணம் வர்ணம்
இசைத்திட என்னைத் தேடி வரணும் வரணும்

பெண்ணல்ல வீணை நான் நீதான் மீட்டு
என்னென்ன ராகங்கள் நீதான் காட்டு
இன்றல்ல நேற்றல்ல காலம் தோறும்
உன்னோடு பின்னோடும் காதல் நெஞ்சம்

வண்ணப்பாவை மோகனம் வாடிப்போன காரணம்
கன்னித்தோகை மேனியில் மின்னல் பாய்ச்சும் வாலிபம்
உன் ஞாபகம் நீங்காமல்
என் நெஞ்சிலே தீயாக கொதிக்குது

நின்னுக்கோரி வர்ணம் வர்ணம்
இசைத்திட என்னைத் தேடி வரணும் வரணும்

ஒரு கிளி தனித்திருக்க
உனக்கென தவம் இருக்க
இரு விழி சிவந்திருக்க
இதழ் மட்டும் வெளுத்திருக்க
அழகிய ரகுவரனே அனுதினமும்

நின்னுக்கோரி வர்ணம் வர்ணம்
இசைத்திட என்னைத் தேடி வரணும் வரணும்



Credits
Writer(s): Kavignar Vaali, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link