Nooraandukku Oru Murai

நூறாண்டுக்கு ஒரு முறை
பூக்கின்ற பூவல்லவா
இந்த பூவுக்கு சேவகம்
செய்பவன் நான் அல்லவா
இதழோடு இதழ் சேர்த்து
உயிரோடு உயிர் கோர்த்து வாழவா
நூறாண்டுக்கு ஒரு முறை
பூக்கின்ற பூவல்லவா
இந்த பூவுக்கு சேவகம்
செய்பவன் நீ அல்லவா
கண்ணாளனே கண்ணாளனே
உன் கண்ணிலே
என்னை கண்டேன்
கண் மூடினாள் கண் மூடினாள்
அந்நேரமும் உன்னை கண்டேன்
ஒரு விரல் என்னை தொடுகையில்
உயிர் நிறைகிறேன் அழகா
மறு விரல் வந்து தொடுகையில்
விட்டு விலகுதல் அழகா
உயிர் கொண்டு வாழும் நாள் வரை
இந்த உறவுகள் வேண்டும்
மன்னவா
நூறாண்டுக்கு ஒரு முறை
பூக்கின்ற பூவல்லவா
இந்த பூவுக்கு சேவகம்
செய்பவன் நீ அல்லவா
இதே சுகம் இதே சுகம் ம்ம்ம்
எந்நாளுமே கண்டால் என்ன
இந்நேரமே இந்நேரமே
என் ஜீவனும் போனால் என்ன
முத்தத்திலே பலவகை உண்டு
இன்று சொல்லட்டுமா கணக்கு
இப்படியே என்னை கட்டி கொள்ளு
மெல்ல விடியட்டும் கிழக்கு
அச்சம் பட வேண்டாம் பெண்மையே
எந்தன் ஆண்மையில் உண்டு மென்மையே
நூறாண்டுக்கு ஒரு முறை
பூக்கின்ற பூவல்லவா
இந்த பூவுக்கு சேவகம்
செய்பவன் நீ அல்லவா
இதழோடு இதழ் சேர்த்து
உயிரோடு உயிர் கோர்த்து
வாழவா ... ஆஆ
நூறாண்டுக்கு ஒரு முறை
பூக்கின்ற பூவல்லவா
இந்த பூவுக்கு சேவகம்
செய்பவன் நீ அல்லவா



Credits
Writer(s): R Vairamuthu, Vidya Sagar
Lyrics powered by www.musixmatch.com

Link