Idhaya Idhaya

இதயா இதயா எனை ஆள்கிற இதயா
உனை நான் விலகும் நிலை ஏனடி
அன்பை உணர பிரிவென்பது விலையா
தனிமை நம்மை இணைக்கிற அலைதானடி

என் கார்மேகம் அங்கே நதி பள்ளம் இங்கே
ஒரு நிறையாத வாழ்வு நிகழுதே நீழுதே
புலன் ஐந்தும் இன்று புலம்பெயர்ந்தபோதும்
என் உயிரின் ஒளியோ உனதே

உன் பெயர் ஒன்றே மந்திரமாகும்
அதை சொன்னால் என் இருளே குயிலாகும்
என் மார்பிலே உன் முக ரேகைகள்
அழியாமலே என் தேகம் கிடக்கும்
கனவோ நினைவாய் நடிக்கும்

இதயா இதயா எனை ஆள்கிற இதயா
உனை நான் விலகும் நிலை ஏனடி
அன்பை உணர பிரிவென்பது விலையா
தனிமை நம்மை இணைக்கிற அலைதானடி

என் கார்மேகம் அங்கே நதி பள்ளம் இங்கே
ஒரு நிறையாத வாழ்வு நிகழுதே நீழுதே
புலன் ஐந்தும் இன்று புலம்பெயர்ந்தபோதும்
என் உயிரின் ஒளியோ உனதே



Credits
Writer(s): Kabilan Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link