Ullaththil Santhiyum

உள்ளத்தில் சாந்தியும் இல்லத்தில் செல்வமும்
உண்டாக்கும் அம்பிகை மூகாம்பிகை

இந்த உலகுக்கே அவள் தான் உமையாம்பிகை
எண்ணங்கள் ஈடேறும் இன்பங்கள் உருவாகும்
இதயத்தில் ஆனந்த குயில் பாடுமே
கோரிக்கையுடன் சென்று காணிக்கை நாம் கொண்டு
கொல்லூர் போனாலே சுகம் கூடுமே

உள்ளத்தில் சாந்தியும் இல்லத்தில் செல்வமும்
உண்டாக்கும் அம்பிகை மூகாம்பிகை

குறை எல்லாம் பறந்தோட கொடும்பகை மறைந்தோட
கொல்லூர் சன்னதிக்கு வாருங்கள்
குறை எல்லாம் பறந்தோட கொடும்பகை மறைந்தோட
கொல்லூர் சன்னதிக்கு வாருங்கள்
பாவத்தை தீர்க்கின்ற பச்சிலை மருந்தொன்றை
பாவத்தை தீர்க்கின்ற பச்சிலை மருந்தொன்றை
பக்தி என்னும் கண்ணில் பாருங்கள்

உள்ளத்தில் சாந்தியும் இல்லத்தில் செல்வமும்
உண்டாக்கும் அம்பிகை மூகாம்பிகை

சங்கரர் வழிபட்ட சக்தியின் பெருமைக்கு
தரணியிலே ஈடு கிடையாது
சங்கரர் வழிபட்ட சக்தியின் பெருமைக்கு
தரணியிலே ஈடு கிடையாது
இவள் பேரை சொல்லி குங்குமம் இட்டாலே
இவள் பேரை சொல்லி குங்குமம் இட்டாலே
எடுத்த காரியம் சிதறாது

உள்ளத்தில் சாந்தியும் இல்லத்தில் செல்வமும்
உண்டாக்கும் அம்பிகை மூகாம்பிகை

இந்த உலகுக்கே அவள் தான் உமையாம்பிகை
எண்ணங்கள் ஈடேறும் இன்பங்கள் உருவாகும்
இதயத்தில் ஆனந்த குயில் பாடுமே
கோரிக்கையுடன் சென்று காணிக்கை நாம் கொண்டு
கொல்லூர் போனாலே சுகம் கூடுமே

உள்ளத்தில் சாந்தியும் இல்லத்தில் செல்வமும்
உண்டாக்கும் அம்பிகை மூகாம்பிகை

அம்மா
அம்மா-ஆ-ஆ



Credits
Writer(s): Malaysia Vasudevan, Kavinger Muthulingam
Lyrics powered by www.musixmatch.com

Link