Ezhundhu Vaa (From "Singappenney")

எழுந்து வா விழாது அடிகள்
நிரந்தரம் இல்லாத வலிகள்
கலங்கினால் வராது வழிகள்
கடந்து வா ஓ ஓ

மென்மை உந்தன்
பிறவி குணமே இல்லை
உந்தன் வலிமை மறைக்க
உண்டாக்கும் பொய்களடி

உடையாதே உடையாதே
இன்னொரு வாய்ப்பும் அமையாதே
உருகாதே உருகாதே
நீ உருவாகும் போதே

ஓ ஓ
மாலைகள் என்றும் காலைகளாய்
பார்க்காதடி போராடடி
சில வெற்றிகள் போதாதடி
போராடடி உன் வேர்வையில் நீராடடி

நதியின் பெயர் எல்லாம்
உன்னை வைப்பான்
ஓட நினைத்தாலே கட்டி வைப்பான்
வீசும் உன் வாளை தான் வாங்கியே
கையில் பொம்மை வைப்பான்

தேவை அடைய நீயும் வேகம் கொண்டாலே
தேவை இன்றியே தேவதை என்பான்
தரையில் சமமாய் சந்தித்திட பயந்தே
அழகாய் உனக்கே ரெக்கை வைப்பான்

உன்னை தட்டும் ஓசைகள்
ஓயும் தூரம் நீ ஓடு
உன் பேர சொல்லட்டும்
உந்தன் தடம் தான்

உன்னை போல பல பேர்
வெற்றி காண போராடு
இங்கு சிலர் முயற்சியே
சரித்திரம் தான்

நீந்து நீந்து எழு
நீரை தாண்டி எழு
பேரலை வரும் மோது போரிடு
துன்பம் தாங்கியே வாகை சூடிடு

தாண்டு தாண்டு தடை
நூறு தாண்டு
விழுந்தாலும் மீண்டு எழுவாய்
என்னோடு விளையாடு ஆடு
விதியோடு மோது மதியால்

எதிர்நீச்சல் அடி பாய்ச்சல்
இனி பேச்சுக்கே இடம் இல்லை
உன் பேச்சில் விதி மாறும்
வரும் மாற்றங்கள் தொடும் விண்ண

அடி பொம்பள பொண்ணுக்கு
புத்தகம் எதுக்கு
புத்திய மொதல்ல அடிச்சி நொறுக்கு

வருவது வரட்டும்
விருகம் அது விரட்டும்
உறுதி உடைய மனதே
கனவை துரத்தும்

மென்மை உந்தன்
பிறவி குணமே இல்லை
ஓ ஓ
உந்தன் வலிமை மறைக்க
உண்டாக்கும் பொய்களடி

உடையாதே உடையாதே
இன்னொரு வாய்ப்பும் அமையாதே
உருகாதே உருகாதே நீ
நீ உருவாகும் போதே

எழுந்து வா நிரந்தரம்
கலங்கினால் கடந்து வா ஹோ



Credits
Writer(s): Arivu, Vivek, Kumaran Sivamani
Lyrics powered by www.musixmatch.com

Link