Rendu Raaja

ஒரே ஒரு ஊருக்குள்ளே
ரெண்டு ராஜா இருந்தாராம்
ஒரு ராஜா நல்லவராம்
இன்னொரு ராஜா கெட்டவராம்

இரவு இருளாய் இல்லையென்றால்
நிலவின் வெளிச்சம் தெரியாதே
அரக்கன் ஒருவன் இல்லையென்றால்
இறைவன் மகிமை புரியாதே

ஒரே ஒரு ஊருக்குள்ளே
ரெண்டு ராஜா இருந்தாராம்
ஒரு ராஜா நல்லவராம்
இன்னொரு ராஜா கெட்டவராம்

பாம்புக்குள்ளும் விஷம் உண்டு
பூவுக்குள்ளும் விஷம் உண்டு
பூவை தலையில் சூடிடுவார்
பாம்பை பார்த்ததும் அடித்திடுவார்

மனிதத்தில் மிருகம் அதிகமடா
மிருகத்தில் மனிதம் அதிகமடா
மிருகத்தை உயிராய் பார்க்கின்றேன்
மனிதனின் உயிரை எடுக்கின்றேன்
இரவு இருளாய் இல்லையென்றால்
நிலவின் வெளிச்சம் தெரியாதே
அரக்கன் ஒருவன் இல்லையென்றால்
இறைவன் மகிமை புரியாதே

ஒரே ஒரு ஊருக்குள்ளே
ரெண்டு ராஜா இருந்தாராம்
ஒரு ராஜா நல்லவராம்
இன்னொரு ராஜா கெட்டவராம்



Credits
Writer(s): Dhanush, Yuvanshankar Raja
Lyrics powered by www.musixmatch.com

Link