It All Comes Down To This ! : Oru Naalil

ஒரு நாளில் வாழ்க்கை இங்கே
எங்கும் ஓடிப் போகாது
மறு நாளும் வந்துவிட்டால்
துன்பம் தேயும், தொடராது
எத்தனைக் கோடிக் கண்ணீர்
மண் மீது விழுந்திருக்கும்
அத்தனை கண்ட பின்னும்
பூமி இங்கு பூப்பூக்கும்

ஹோ ஹோ ஹோ
கரு வாசல் விட்டு வந்த நாள் தொட்டு
ஹோ ஹோ ஹோ
ஒரு வாசல் தேடியே விளையாட்டு
ஹோ ஹோ ஹோ
கண் திறந்துப் பார்த்தால் பலக் கூத்து
ஹோ ஹோ ஹாஹாஹ
கண் மூடிக் கொண்டால்
ஓ ஹோ... ஹா... ஓ... ஹோஹோ

போர்க்களத்தில் பிறந்துவிட்டோம்
வந்தவை போனவை வருத்தம் இல்லை
காட்டினிலே வாழ்கின்றோம்
முட்களின் வலி ஒன்றும் மரணம் இல்லை
இருட்டினிலே நீ நடக்கையிலே
உன் நிழலும் உன்னை விட்டு விலகிவிடும்
நீ மட்டும் தான் இந்த உலகத்திலே
உனக்கு துணை என்று விளங்கிவிடும்

தீயோடு போகும் வரையில்
தீராது இந்தத் தனிமை

கரை வரும் நேரம் பார்த்து
கப்பலில் காத்திருப்போம்
எரிமலை வந்தாள் கூட
ஏறி நின்று போர் தொடுப்போம்

ஹோ ஓ ஓ
அந்த தெய்வ ரகசியம் புரிகிறதே
ஹோ ஓ ஓ
இங்கு எதுவும் நிலையில்லை கரைகிறதே
ஹோ ஓ ஓ
மனம் வெட்டவெளியிலே அழைகிறதே
ஹோ ஓ ஓ
அந்தக் கடவுளை கண்டால்
ஓ ஹோ ஹோ... யே ஹே ஹே
ஹே ஹே... ஓ
லராராரா... ராரா... லராரா

அது எனக்கு, இது உனக்கு
இதயங்கள் போடும் தனிக் கணக்கு
அவள் எனக்கு, இவள் உனக்கு
உடல்களும் போடும் புதிர் கணக்கு
உனக்குமில்லை இது எனக்கும் இல்லை
படைத்தவனே இங்கு எடுத்துக்கொள்வான்
நல்லவன் யாரடா, கெட்டவன் யார்?
கடைசியில் அவனே முடிவு செய்வான்

பழி போடும் உலகம் இங்கே
பலியான உயிர்கள் எங்கே?

உலகத்தின் ஓரம் நின்று
அத்தனையும் பாத்திருப்போம்
நடப்பவை நாடகம் என்று
நாமும் சேர்ந்து நடித்திருப்போம்

ஓ ஓ ஓ
பல முகங்கள் வேண்டும், சரி மாட்டிக்கொள்வோம்
ஓ ஓ ஓ
பல திருப்பம் தெரியும், அதில் திரும்பிக் கொள்வோம்
ஓ ஓ ஓ
கதை முடியும் போக்கில் அதை முடித்துக்கொள்வோம்
ஓ ஓ ஓ
மறுப்பிறவி வேண்டுமா?

ஹோஹோ... லலரா லாரரா
லரரா லாரரரா... ஹேஹே
ஹுஹுஹு ஹுஹு ஹுஹுஹுஹ
ஹுஹுஹு ஹுஹு ஹுஹுஹுஹ
ஹே ஹே ஹே



Credits
Writer(s): Yuvan Shankar Raja
Lyrics powered by www.musixmatch.com

Link