Maalai Nerathu Kanavu

தேன் விழும் மலர்
உனைத் தேடி தென்றல் அலைந்திட
உன் வாசம் கை கொர்த்திட
மேகம் அது கைத்தட்டுதே...
மழை பொழிந்திடும்
அந்நேரம் மனம் பறந்திட
உன் இதழின் ஓரத்திலே
சேர அது துடித்திடுதே...
Music
உன் விழி தரும் போதையில்
நிழலும் தடுமாறிடுதே...
உனை செரும் ஆசையில்
என் மனம் தத்தி தாவிடுதே...
கண் அருகில் அவள் முகம்
சட்டென்று நேரம் தேய்ந்திடும்
உன் குரல் ஓசையில்
என் உயிர் வாழுதே
வா நீ என் உயிரே...
அடி உன் விரல் கொர்த்திட
ஏங்குது கைகள்
வா நீ என் அழகே...
தேன் விழும் மலர்
உனைத் தேடி தென்றல் அலைந்திட
உன் வாசம் கை கொர்த்திட
மேகம் அது கைத்தட்டுதே...
என் கனாவினில்
நம் காதல் உனை அழைத்திட
உன் வெட்கம் கோர்த்திட
நான் நூல் ஆகிடுவேன்...!



Credits
Writer(s): Dhanush
Lyrics powered by www.musixmatch.com

Link