Snehidhane

சிநேகிதனே சிநேகிதனே ரகசிய சிநேகிதனே
சின்னச் சின்னதாய் கோரிக்கைகள்
செவி கொடு சிநேகிதனே
இதே அழுத்தம் அழுத்தம்
இதே அணைப்பு அணைப்பு
வாழ்வின் எல்லை வரை
வேண்டும் வேண்டும்

வாழ்வின் எல்லை வரை வேண்டும் வேண்டுமே
சிநேகிதனே சிநேகிதனே
ரகசிய சிநேகிதனே

சின்னச் சின்ன அத்து மீறல் புரிவாய்
என் செல் எல்லாம் பூக்கள் பூக்கச் செய்வாய்
மலர்கையில் மலர்வாய்

பூப்பறிக்கும் பக்தன் போல மெதுவாய்
நான் தூங்கும் போது விரல் நகம் களைவாய்
சத்தமின்றி துயில்வாய்
ஐவிரல் இடுக்கில் ஆலிவ் எண்ணெய் பூசி
சேவகம் செய்ய வேண்டும்
நீ அழும்போது நான் அழ நேர்ந்தால்
துடைக்கின்ற விரல் வேண்டும்

சிநேகிதனே சிநேகிதனே
ரகசிய சிநேகிதனே
சின்னச் சின்னதாய் கோரிக்கைகள்
செவி கொடு சிநேகிதனே
நேற்று முன்னிரவில் உன் நித்திலப்பூ மடியில்
காற்று நுழைவது போல்
உயிர் கலந்து களித்திருந்தேன்

இன்று பின்னிரவில் அந்த ஈர நினைவில்
கன்று தவிப்பது போல்
மனம் கலங்கி புலம்புகிறேன்
கூந்தல் நெளிவில் எழில் கோலச்சரிவில்
கூந்தல் நெளிவில் எழில் கோலச்சரிவில்
கர்வம் அழிந்ததடி. என் கர்வம் அழிந்ததடி
சொன்னதெல்லாம் பகலிலே புரிவேன்

சொன்னதெல்லாம் பகலிலே புரிவேன்
நீ சொல்லாததும் இரவிலே புரிவேன்
காதில் கூந்தல் நுழைப்பேன்
உந்தன் சட்டை நானும் போட்டு அலைவேன்
நீ குளிக்கையில் நானும் கொஞ்சம் நனைவேன்

உப்பு மூட்டை சுமப்பேன்
உன்னை அள்ளி எடுத்து
உள்ளங்கையில் மடித்து
கைக்குட்டையில் ஒளித்துக் கொள்வேன்
வேளைவரும் போது விடுதலை செய்து
வேண்டும் வரம் வாங்கிக் கொள்வேன்

சிநேகிதனே சிநேகிதனே
ரகசிய சிநேகிதனே
சின்னச் சின்னதாய் கோரிக்கைகள்
செவி கொடு சிநேகிதனே



Credits
Writer(s): Vairamuthu, A.r. Rahman, Samyu Mohan
Lyrics powered by www.musixmatch.com

Link