Katril Varum Geethame (Bit)

காற்றில் வரும் கீதமே
என், கண்ணனை அறிவாயா?

காற்றில் வரும் கீதமே
என், கண்ணனை அறிவாயா?

அவன் வாய் குழலில் அழகாக
அமுதம் ததும்பும் இசையாக
மலர்ந்தாய் நடந்தாய் அலைபோல் மிதந்து

காற்றில் வரும் கீதமே
என், கண்ணனை அறிவாயா?

ஆதார சுருதி அந்த அன்னை என்பேன்
அதற்கேற்ற லயம் எந்தன் தந்தை என்பேன்
ஸ்ருதிலயங்கள் தன்னை சுற்றும் ஸ்வரங்கள் எல்லாம்
உறவாக அமைந்த நல்ல இசைக் குடும்பம்

திறந்த கதவு என்றும் மூடாது
இங்கு சிறந்த இசை விருந்து குறையாது
இது போல் இல்லம்
எது சொல் தோழி?

காற்றில் வரும் கீதமே
என், கண்ணனை அறிவாயா?
அவன் வாய் குழலில் அழகாக
அமுதம் ததும்பும் இசையாக
மலர்ந்தாய் நடந்தாய் அலைபோல் மிதந்து

காற்றில் வரும் கீதமே
என், கண்ணனை அறிவாயா?



Credits
Writer(s): Vaali, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link