Piriyathiru (From "Irugapatru")

மழை நீரின் கூட்டிலே
சிறு விரிசல் விழுந்ததே ஓசையின்றி
அலைபாயும் காற்றிலே
அது கரைந்து போகுதே பாரடி
அழகான நேசமே
புதிரான கேள்வியாய் ஆனாதே
புரியாத தேடலே
நம் வாழ்க்கை ஆனாதே ஏனடி?

நதி இல்லா காடாக
மதி இல்லா வானாக
அலை இல்லா கடலாக
ஆவதோ பிரியாதிரு

வழி இல்லா வீடாக
நிலை இல்லா கூடாக
குரல் இல்லா குயிலாக
ஆவதோ பிரியாதிரு

பிரியாதிரு, பிரியாதிரு
பிரியாதிரு, பிரியாதிரு
பிரியாதிரு, பிரியாதிரு
பிரியாதிரு, பிரியாதிரு

பிரியாதிரு, பிரியாதிரு
பிரியாதிரு, பிரியாதிரு
பிரியாதிரு, பிரியாதிரு
பிரியாதிரு, பிரியாதிரு

மழை நீரின் கூட்டிலே
சிறு விரிசல் விழுந்ததே ஓசையின்றி
அலைபாயும் காற்றிலே
அது கரைந்து போகுதே பாரடி
அழகான நேசமே
புதிரான கேள்வியாய் ஆனாதே
புரியாத தேடலே
நம் வாழ்க்கை ஆனாதே ஏனடி?

பிழையான நேற்றுக்கு
பரிகாரம் வாராதா?
புதிதாக ஓர் வாழ்வை
வாழ்ந்திருப்போமா அன்பே?

வழி தேடும் நெஞ்சுக்கு
விடை வந்து சேராதா?
நிலை மாறும் வரை நாமும்
காத்திருப்போமா அன்பே?

ஊடல் இல்லா காதல்
காதல் இல்லா கூடல்
வாசல் இல்லா குடிலாய்
ஆகாதோ சொல் அன்பே?

ஒரு கண்ணில் கோபம்
மறு கண்ணில் தாபம்
அடி இது என்ன வேதம்
பிழைக்காதோ காதல்

நதி இல்லா காடாக
மதி இல்லா வானாக
அலை இல்லா கடலாக
ஆவதோ பிரியாதிரு

வழி இல்லா வீடாக
நிலை இல்லா கூடாக
குரல் இல்லா குயிலாக
ஆவதோ பிரியாதிரு

பிரியாதிரு, பிரியாதிரு
பிரியாதிரு, பிரியாதிரு
பிரியாதிரு, பிரியாதிரு
பிரியாதிரு, பிரியாதிரு

பிரியாதிரு, பிரியாதிரு
பிரியாதிரு, பிரியாதிரு
பிரியாதிரு, பிரியாதிரு
பிரியாதிரு, பிரியாதிரு

பிழைக்காதோ காதல்?
பிழைக்காதோ காதல்?
பிழைக்காதோ காதல்?
காதல்...

பிழைக்காதோ காதல்?
பிழைக்காதோ?
பிழைக்காதோ... பிழைக்காதோ?
பிழைக்காதோ காதல்?



Credits
Writer(s): Justin Prabhakaran, Karthik Netha
Lyrics powered by www.musixmatch.com

Link