Poovizhi Penne (From "Aattral")

பூவிழி பெண்ணே இரவெல்லாம் நான் திண்டாடினேன்
துளி கூட தூங்காமலே
நீ தரும் பார்வை அது நெஞ்சோரமாய் ஓயாமலே
பெய்திடும் சாரல் மழையே

ஹோ-எதற்காக மண்ணில் பிறந்தேன் அதை நானும் இன்று
உனக்காக என்றே உணர்ந்தேன்
எதற்காக கண்கள் திறந்தேன் அசையாமல் உந்தன்
முகம் பார்க்க என்றே அறிந்தேனே

பூவிழி பெண்ணே இரவெல்லாம் நான் திண்டாடினேன்
துளி கூட தூங்காமலே (துளி கூட தூங்காமலே)
நீ தரும் பார்வை அது நெஞ்சோரமாய் ஓயாமலே
பெய்திடும் சாரல் மழையே

எதற்காக மண்ணில் பிறந்தேன் அதை நானும் இன்று
உனக்காக என்றே உணர்ந்தேன்
எதற்காக கண்கள் திறந்தேன் அசையாமல் உந்தன்
முகம் பார்க்க என்றே அறிந்தேன்

அய்யோ-ஓ-ஓ (அய்யோ-அய்யோ)

கண்களின் பல்லால் கடிக்காதே
ஒரு காகிதம் போல கிழிக்காதே
இமைகளும் என்னை ஏதோ செய்யுதே
குறுநகை அள்ளி வீசாதே
நீ துறு துறு வார்த்தை பேசாதே
இளமனம் உள்ளே ஏக்கம் கொள்ளுதே

ஹோ-ஓ-ஓ-லேசாக பார்க்கும் போது loose ஆகுறேன் (ஓ-ஒ)
காத்தோடு மேலே போகும் தூசாகுறேன் (ஓ-ஒ)
கூசாம ஆசை மிஞ்ச நான் பாக்குறேன் (ஓ-ஒ)
நொடி தூரம் உன்னை நினைத்தே (அய்யோ-ஓ-ஓ)

பூவிழி பெண்ணே இரவெல்லாம் நான் திண்டாடினேன்
துளி கூட தூங்காமலே
நீ தரும் பார்வை அது நெஞ்சோரமாய் ஓயாமலே
பெய்திடும் சாரல் மழையே

நீ தீயா மழையா இல்ல தீரா வெயிலா
நீ ஓயா புயலா சொல்லடா
உன்னாலே நனைந்து உன்னாலே கரைந்து
உன்னாலே தொலைந்தேன் ஏனடா

ஓ-ஓ-ஓ-காணாமல் போனேன் இன்று நானாகவே
ஆனாலும் நெஞ்சில் இன்பம் தேனாகவே
நீயின்றி நாட்கள் போகும் வீணாகவே
உனக்காக உயிரும் விடுவேனே

ஒரு வாழ்க்கை போதாதென்று
இன்னும் நூறு வாழ்க்கை கேப்பேன்
சளிக்காமல் பூவே உந்தன் மடியில்
சாய்ந்து வாழ்ந்தே தீர்ப்பேன்
அந்நியாய காதல் என்னை
கொல்ல கொல்ல இன்பம் கொள்வேன்
எனக்கே நான் தேவையில்லையே

பூவிழி பெண்ணே இரவெல்லாம் நான் திண்டாடினேன்
துளி கூட தூங்காமலே (துளி கூட தூங்காமலே)
நீ தரும் பார்வை அது நெஞ்சோரமாய் ஓயாமலே
பெய்திடும் சாரல் மழையே

பூவிழி பெண்ணே, பூவிழி பெண்ணே
கண்ணே கண்ணே-நானா-நேனா
நீ தரும் பார்வை, நீ தரும் பார்வை

தந்நே-நந்நே-தானா-நேனா
தந்நே-நந்நே-தானா-நேனா
தந்நே-நந்நே-தானா-நேனா



Credits
Writer(s): Ashwin Hemanth, Vivekanandan Munusamy
Lyrics powered by www.musixmatch.com

Link