Yaarum Kaanadha

யாரும் காணாத விண்மீனே
மனம் காணும் பூந்தருணம்
சந்தம் சிந்தும் சாரல் போலே
விழும் கண்ணே உன் மெளனம்

யாரும் கேட்காத ஓசைகளால்
மீட்டும் உன் பார்வையே
யாரும் பேசாத வார்த்தைகளால்
பேசும் உன் காதலே

யாரும் காணாத கண்ணீரே
உனை தாங்கும் என் நெஞ்சம்
பாதை இனிமேல் தீராதே
காதல் பெருந்துணையென வருதே

ஊழை அடடா வேண்டாமே
பேதை நானாகும் யோகம்
இனி தேனில் நடனம்
என் உயிரில் ஆடும் தருணம்
மெய்யே தீரா தாளம்

யாரும் கேட்காத ஓசைகளால்
மீட்டும் உன் பார்வையே

யாரும் பேசாத வார்த்தைகளால்
பேசும் உன் காதலே
யாரும் காணாத விண்மீனே

நேற்றே இனியும் வாராதே
காதல் முடிவிலி என வருதே

யாரும் துணையாய் வேண்டாமே
காதல் தாலாட்டும் தாயின் மடி
தேடல் விரதம்
உன் விழியின் காம்பில் கருகும்
நீயே வாழ்வின் தூரம்

யாரும் கேட்காத ஓசைகளால்
மீட்டும் உன் பார்வையே

யாரும் பேசாத வார்த்தைகளால்
பேசும் உன் காதலே

யாரும் காணாத விண்மீனே



Credits
Writer(s): Govind P. Menon, Karthik Prasanna Rathinam
Lyrics powered by www.musixmatch.com

Link