Netru Varai

நேற்று வரை நேற்று வரை
தனித்திருந்தேன் யாரும் இல்லை
இன்று முதல் தொடங்கியதே
உலகின் முதல் காதல் கதை

அனலாக வேகும் பனிபோல மோதும்
மழை கால மேகம் கண்டேன்
கரை சேர வேண்டும் கடல் என்று தேயும்
உனை தேடி கண்டு கொண்டேன்
பேசும் போதிலே கேளா ஒலி
பார்வை ஆகுமே தீபாவளி
உன்னை போல யாருமில்லை
என் இறைவி

நேற்று வரை நேற்று வரை
தனித்திருந்தேன் யாரும் இல்லை
இன்று முதல் தொடங்கியதே
உலகின் முதல் காதல் கதை
ஏலே ஏலே ஏலே ஏலே ஏலேலேலே
ஏலே ஏலே ஏலே ஏலே ஏலேலேலே

மௌனம் என்னும் உன் மொழியில்
மழலையாகி பேசுகிறாய்
ஒலிகளினால் நம் உலகில்
கவிதை சாயம் பூசுகிறாய்
கனவா நனவா தெரியா நிலையே
பகலை இரவாய் பழகும் கலையே

நேற்று வரை நேற்று வரை
தனித்திருந்தேன் யாரும் இல்லை
இன்று முதல் தொடங்கியதே
உலகின் முதல் காதல் கதை

எனது காற்றில் நீ கரைந்தாய்
எனது வானம் நீ அளந்தாய்
எனது வாசல் நீ திறந்தாய்
எனது ஓசை நீ உணர்ந்தாய்
ஒரு நாள் நிழலாய்
தரையில் இருந்தாய்
பிறகு என் மனதில்
நிலவாய் நிறைந்தாய்

நேற்று வரை நேற்று வரை
தனித்திருந்தேன் யாரும் இல்லை
இன்று முதல் தொடங்கியதே
உலகின் முதல் காதல் கதை



Credits
Writer(s): Subramanian Thamarai, Prakashkumar G. Venkate
Lyrics powered by www.musixmatch.com

Link