Joshua Siru Paeraasai

சடசடவென நனைத்திடும் அடை மழையென
சிலநொடி சிறகடித்திட துணை கிடைத்திட
தரை இறங்கும் பொழுது நெருங்கிட நெருங்கிட
இமைத்திடும் இடைவெளி இடியது இறங்கிட

படபடத்தது ஒரு மனமல்ல இரண்டென
துடிப்பதின் இடை அமைதியில் உயிர் உணர்ந்திட
பழகிய உருகிய தினம் அது வரம்
என பிரிகிற கணம் எனில் ஒரு வலி கதறிட

Joshua சிறு பேராசை
நானின்னும் கேளாத பாடல்கள் பாடாயோ
Joshua சிறு பேராசை
ஒன்றாக காணாத லோகங்கள் காட்டாயோ

ரௌத்திரமா உண்விழியில் அது
நான் தூரம் போகையில் ஒளிறிடுதே
Joshua சிறு பேராசை
யாரோடும் கூறாத ஓர் வார்த்தை சொல்வாயோ

படபடத்தது ஒரு மனமல்ல இரண்டென
துடிப்பதின் இடை அமைதியில் உயிர் உணர்ந்திட
பழகிய உருகிய தினம் அது வரம்
என பிரிகிற கணம் எனில் ஒரு வலி கதறிட

நில் ஏன் நீ சொல் என் கண் துளி
எண்ணில் பார் உன் வலி
நில் ஏன் நீ சொல் என் கண் துளி
எண்ணில் பார் உன் வலி

Joshua சிறு பேராசை
நானின்னும் கேளாத பாடல்கள் பாடாயோ
Joshua சிறு பேராசை
யாரோடும் கூறாத ஓர் வார்த்தை சொல்வாயோ



Credits
Writer(s): Karthik, Super Subu
Lyrics powered by www.musixmatch.com

Link