Vaan Nila

வான் நிலா தரும் ஒளி இவள் விழி
தேன் பலா தரும் சுவை இவள் மொழி
தமிழ் தானோ
பார் புகழ் நயில் நதி இவள் நடை
தாமரை மலர்கொடி இவள் இடை
தமிழ் பெண்ணோ
உன் அழகினை பாட என் தமிழ்மொழி போதாது
நான் உவமைகள் சொன்னால் அது முழுமையென்றாகாது
நீ ஒரே ஒருதரம் பிறந்தவள்
அவள் படைப்பினில் மிக சிறந்தவள்

சிலு சிலுவென விழும் புது பனி துளியோ
மழை எழுதும் முதல் கவியோ
தம் தம் தம் சங் சங்கீதம்
கொலுசொலி ஜல்
நீலம் தோய்த்த அந்த ஆகாயம்
உந்தன் மேலாடும் நூலாடையோ
ஓருதரம் சிரிக்கையில் நவரசம் தெறிக்கையில்
புது புது கவிதைகள் புறப்படும் புறப்படும்
ரதியே ரதம் போல் நடந்தே
நீ வரும் வழி எங்கும்
குருஞ்சி மலர்போல் குலுங்கும்
கூர் நெருஞ்சி முள் எங்கும்
நதிக்குள் குதிக்கும் மீன்கள்
உன் நீள் விழி கண்டு
நிலத்தில் வாழும் மீனோ என வியப்பதுண்டு

வான் நிலா தரும் ஒளி இவள் விழி
தேன் பலா தரும் சுவை இவள் மொழி
தமிழ் தானோ
பார் புகழ் நயில் நதி இவள் நடை
தாமரை மலர்கொடி இவள் இடை
தமிழ் பெண்ணோ

தினம் தினம் மனதினில் உந்தன் முகமெழுதி
ரசித்திருப்பேன் உயிர் தழுவி
காதல் தேவி என் நெஞ்சம்
உன் கோயில் தான் காதல் என்றும்
அந்த கோயில் தீபம் என்று
எண்ணங்கள் ஏற்றாதோ
இடி மின்னல் மழையிலும் அடிக்கின்ற புயலிலும்
உயிருள்ள வரையிலும் ஒளி விடும் விளக்கிது
எனைத்தான் கணம் நீ பிரிந்தால்
நீர் விழிகளும் வார்க்கும்
உன்னைத்தான் வருத்தும் அவள் யார்
என இயற்கையும் கேட்கும்
பெண்ணை அழகாய் படைத்த
அந்த இயற்கையின் வேலை
அறிந்தும் எனையே கேட்டால் அட
இது என்ன லீலை

வான் நிலா தரும் ஒளி இவள் விழி
தேன் பலா தரும் சுவை இவள் மொழி
தமிழ் தானோ
பார் புகழ் நயில் நதி இவள் நடை
தாமரை மலர்கொடி இவள் இடை
தமிழ் பெண்ணோ
உன் அழகினை பாட என் தமிழ்மொழி போதாது
நான் உவமைகள் சொன்னால் அது முழுமையென்றாகாது
நீ ஒரே ஒருதரம் பிறந்தவள்
அவள் படைப்பினில் மிக சிறந்தவள்



Credits
Writer(s): Vaalee
Lyrics powered by www.musixmatch.com

Link